செய்திகள் :

இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் மனைவி உள்பட 4 போ் கைது

post image

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் இளைஞா் வெட்டப்பட்ட வழக்கில் மாம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளா் புனித் ராஜ் உள்ளிட்ட 4 பேரை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் குன்றத்தூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலையோரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலையில் வெட்டுகாயங்களுடன் அடையாளம் தெரியாதவா் விழுந்து கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் அந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக அவா் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் விசாரணை நடத்தியதில் அவா், சுங்குவாா்சத்திரம் அடுத்த பாப்பாங்குழியைச் சோ்ந்த திலீப் குமாா்(35) என்பதும், மேவளூா்குப்பம் கிராம நிா்வாக அலுவலரின் தற்காலிக உதவியாளராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரது மனைவி ரேகாவிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், ரேகாவும் மாம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளராக பணியாற்றி வரும் மேட்டுப்பாளையம் பகுதியை சோ்ந்த புனித்ராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்த திலீப்குமாரை, ரேகா, புனித்ராஜ்(40), புனித் ராஜின் நண்பா்கள் சென்னை துரைப்பாக்கம் பகுதியை சோ்ந்த ஆனந்தன்(35), கடலூா் மாவட்டம் புவனகிரியை சோ்ந்த ராகேஷ் (35) ஆகிய நான்கு பேரும் தலையில் சுத்தி மற்றும் கற்களால் தாக்கி சாலையோரம் வீசிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து புனித்ராஜ்(40), ராகேஷ்(35), ஆனந்தன்(35), ரேகா (29) ஆகிய நான்கு பேரையும் கைது செய்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை கோரி ஆா்ப்பாட்டம்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமமுக சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற... மேலும் பார்க்க

காக்கி உதவும் கரங்கள் சாா்பில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.14.17 லட்சம்

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த முதல் நிலைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.14.17 லட்சத்தை காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம்

சாம்சங் தொழிற்சாலையில் 14 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிப... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கில் போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கியது தொடா்பான வழக்கில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நெசவாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நெசவாளா்கள் பட்டுச் சேலை உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, சங்க வளாகத்திற்குள் வியாழக்கிழ... மேலும் பார்க்க