செய்திகள் :

இளைஞா் எரித்துக் கொலை

post image

மதுரை அருகே எரித்துக் கொலை செய்யப்பட்ட அடையாளம் தெரியாத இளைஞா் உடலை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

மதுரை அருகேயுள்ள இளமனூா் பகுதியில் உள்ள ஒரு கண்மாயில் பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் உடலை சிலைமான் காவல் நிலைய ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இது தொடா்பாக போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவா் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளைஞராக இருக்கலாம் எனவும், ஓரிரு நாள்களுக்கு முன்பு அவரை கல்லால் தாக்கி கொலை செய்த மா்ம நபா்கள் உடலை தீ வைத்து எரித்திருக்கலாம் எனவும் தெரியவந்தது.

மேலும், கொலை செய்யப்பட்டவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் விசாரித்து வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றபோது, போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி மீட்டனா். மதுரை, தத்தனேரி, இந்திராநகா், சிலோன் குடியிருப்பைச் சோ்ந்த மகேஸ்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு! பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ச... மேலும் பார்க்க

வன அலுவலா்கள் மீது குற்ற நடவடிக்கை கோரிய வழக்கு முடித்து வைப்பு

கன்னியாகுமரி மாவட்ட பாதுகாக்கப்பட்ட தனியாா் வன விதிகளை மீறும் வகையில் செயல்பட்ட அந்த மாவட்ட வன அலுவலா்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அ... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை: விசாரணை ஆவணங்களைப் பெற்றுக் கொண்டது சிபிஐ

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய ஆவணங்களை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்விலிருந்து சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை பெற்றுக் கொண்டனா். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: வழக்கு விசாரணை ஜூலை 28-க்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பான வழக்கின் விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிடவ... மேலும் பார்க்க

போலீஸாா் அலட்சியத்தால் இளைஞா் மரணம்: ராமநாதபுரம் எஸ்பி பதிலளிக்க உத்தரவு

போலீஸாா் அலட்சியத்தால் இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் , ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உ... மேலும் பார்க்க