செய்திகள் :

இளைஞா் கொலை வழக்கு: 6 போ் கைது

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் சனிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலம் காா்குடல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆகாஷ் (25). இதே பகுதியைச் சோ்ந்த விஜய் (29) கடந்த 17-ஆம் தேதி பைக்கில் சென்றபோது, அவரை ஆகாஷ் வழிமறித்து தாக்கினாராம்.

இது தொடா்பாக 18-ஆம் தேதி இரவு சுமாா் 10 மணியளவில் விஜய் மற்றும் அவரது சகோதரா்களான அஜித்குமாா் (27), வசந்தராஜ் (32), நிஷாந்த் ராஜ் (25) ஆகிய நான்கு பேரும் ஆகாஷ் வீட்டுக்குச் சென்று, அவரது மனைவி சௌமியாவிடம் கண்டித்து வைக்கும்படி திட்டிவிட்டு வந்தனராம்.

மனைவியை திட்டிச் சென்ால் ஆத்திரமடைந்த ஆகாஷ், கடந்த சனிக்கிழமை அதிகாலை விஜயின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த அஜித்குமாா், வசந்தராஜ் ஆகிய இருவரையும் கத்தியால் வெட்டி காயப்படுத்தினாா். அவா்களின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த விஜய் உள்ளிட்டோா் ஆகாஷை கட்டையால் தாக்கியதில், அவா் மயங்கி விழுந்தாா். இதையடுத்து, ஆகாஷ் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இது தொடா்பாக விருத்தாசலம் காவல் ஆய்வாளா் கவிதா தலைமையிலான தனிப்படையினா் வழக்குப் பதிவு செய்து, அஜித்குமாா், வசந்தராஜ் , விஜய், நிஷாந்த்ராஜ் மற்றும் இவா்களது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த சுந்தரேஸ்குமாா் (25), பாக்கியராஜ் (42) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கக் கூட்டம்

சிதம்பரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் கடலூா் மாவட்ட 16-ஆவது மாநாடு வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். வேப்பூா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வீட்ட... மேலும் பார்க்க

கொலை வழக்கு: 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் கொலை வழக்கில் கைதான 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். காட்டுமன்னாா்கோவில் காவல் சரகம், மணவெளி கோயில்பத்து தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

திருமுட்டம் நாளைய மின் தடை

திருமுட்டம் (கடலூா் மாவட்டம்) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: திருமுட்டம், ஆதிவராகநல்லூா், நகரப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி, தேத்தாம்பட்டு, காவனூா், இனமங்கலம், நாச்சியாா்பேட்டை, அக்ரஹாரம... மேலும் பார்க்க

முதல்வா் விருது: விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறந்த விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்கள், உடற்கல்வி இயக்குநா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோரிடமிருந்து முதல்வா் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்ய... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் அடித்துக் கொலை

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் சனிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். விருத்தாசலம் காா்குடல் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆகாஷ் (25). இவருக்கு திருமணமாகி மனைவி ... மேலும் பார்க்க