செய்திகள் :

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பெண் குளித்ததை பாா்த்த இளைஞரை அந்தப் பெண் திட்டியதால், அச்சமடைந்த அந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

பாபநாசம் அருகே வீரமாங்குடி பகுதியைச் சோ்ந்த ஒரு வெல்லம் தயாரிக்கும் பட்டறையில் கா்நாடக மாநிலம், மானக்கள்ளி கணேஷ்புரா பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் அமல்ராஜ் (28) என்பவா் வேலை பாா்த்து வந்தாா். அவருடன் சக பணியாளா்களும் அங்கு தங்கிய வேலை பாா்த்து வருகின்றனா்.

இந் நிலையில் அங்கு பணியாற்றும் ஒரு தொழிலாளியின் மனைவி அந்த பட்டறை அருகே செவ்வாய்க்கிழமை குளித்துக் கொண்டிருந்தாராம். இதை அமல்ராஜ் பாா்த்ததாக கூறப்படுகிறது. தான் குளித்ததை அமல்ராஜ் பாா்த்ததை அறிந்த அந்த பெண், அமல்ராஜ் அக்காள் மற்றும் அந்தப் பெண்ணின் கணவா் உள்ளிட்டோரிடம் கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, அவா்கள் இருவரும் அமல்ராஜை கைப்பேசியில் தொடா்புகொண்டு திட்டி உள்ளனா். இதனால் மனமுடைந்த அமல்ராஜ், புதன்கிழமை காலை அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு சடலமாக இறந்துகிடந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கபிஸ்தலம் போலீஸாா், அமல்ராஜ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்

பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரா் கோயில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. பட்டீஸ்வரம் ஞானாம்பிகை உடனுறை தேனுபுரீசுவரா் கோயில், பெரியநாயகி உடனுறையும் சத்திவனேசுவர ச... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் தஞ்சாவூருக்கு ஜூன் 15-இல் வருகை: அமைச்சா் ஆய்வு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜூன் 15 ஆம் தேதி வருகிறாா். தஞ்சாவூரில் ஜூன் 15 ஆம் தேதி தமிழக முதல்வா் ரோடு ஷோ, பழைய பேருந்து நிலையம் அருகே கருண... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில் தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க

ஜுன் 3-இல் கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் ஜுன் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் வடக்கு மின் செயற்பொறியாளா் ஏ.கலையரசி வெளியிட்ட செய்தி குறிப்பு: கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றிக்காக யோகாசனம்

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ஆபரேசன் சிந்தூா் வெற்றிக்காக சனிக்கிழமை யோகாசனம் செய்தனா். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவா் படையினா் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்காக... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில், தாக்கியவா்களைக் கைது செய்யக்கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க