அரக்கோணத்தில் சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
இஸ்ரேலின் உளவு அமைப்பு தலைமையகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் - ஈரான் சண்டை ஐந்தாவது நாளை எட்டியிருக்கும் நிலையில், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸ்ஸாத் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலிய ஊடகம் வெளியிட்டிருக்கும் தகவலில், நாட்டின் தலைநகர் டெல் அவிவ் நகரில் அமைந்திருக்கும் மொஸ்ஸாத் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், அப்பகுதியே கரும்புகை சூழப்பட்டுள்ளதாகவும், மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
BREAKING: IRAN just BOMBED ISRAELI MOSSAD HQ! pic.twitter.com/6qrUEPHSSi
— Jackson Hinkle (@jacksonhinklle) June 17, 2025
இந்த நிலையில், ஈரான் தரப்பில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல் தொடங்கியிருப்பதாகவும், இது இதற்கு முந்தைய தாக்குதல்களைக் காட்டிலும் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மோசமானதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் மத்திய கடற்கரைப் பகுதிகள் மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ மற்றும் புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஈரானிய ஊடகம் தெரிவிக்கிறது.