செய்திகள் :

இஸ்ரேலுடனான போரின்போது 21,000 பேர் கைது: ஈரான் அரசு அறிவிப்பு!

post image

இஸ்ரேலுடன் நடைபெற்ற போரின்போது, சந்தேகத்தின் அடிப்படையில் 21,000 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக, ஈரான் அரசு அறிவித்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில், கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல் நடைபெற்ற போரானது, ஜூன் 24 ஆம் தேதியன்று 12-ம் நாளை எட்டியபோது போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் போர் காலத்தில் ஈரானில் சந்தேகத்தின் அடிப்படையில் பாதுகாப்பிற்காக சுமார் 21,000 பேர் கைது செய்யப்பட்டதாக, ஜெனரல் சயீத் மொண்டாசெரல்மஹ்தி அறிவித்துள்ளார். இருப்பினும், அவர்கள் மீது எவ்வித குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறித்த தகவல்களை அவர் கூறவில்லை.

ஆனால், 260-க்கும் மேற்பட்டோர் உளவாளிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், 172 பேர் சட்டவிரோதமாக படம் பிடித்ததற்காகவும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் கடந்த ஜூன் மாதம் மட்டும், இஸ்ரேலுக்காக உளவுப் பார்த்தக் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, ஈரானின் ராணுவத் தளவாடங்கள், அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீதான இஸ்ரேலின் “ஆபரேஷன் லயன்” தாக்குதல்களைத் தொடர்ந்து இருநாட்டுக்கும் இடையில் போர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரஷியாவின் ஒரே ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்!

The Iranian government has announced that 21,000 people were arrested by police on suspicion during the war with Israel.

மியான்மர் வான்வழித் தாக்குதலில் சிக்கிய நிவாரணக் குழு! 8 பேர் பலி!

மியான்மர் ராணுவ அரசின் படைகளுக்கும், உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான வான்வழித் தாக்குதல்களில் சிக்கிய நிவாரணக் குழுவைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மியான்மரில் மக்... மேலும் பார்க்க

இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் தலைமைத் தளபதி மனித குலத்தின் எதிரி: பலூச் தலைவர்!

இந்தியாவுக்கு, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி அசீம் முனீர் அணு ஆயுத மிரட்டல் விடுத்ததற்கு, அமெரிக்க பலூச் காங்கிரஸ் தலைவர் தாரா சந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ராணுவத் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தான் நாட்டுடனான எல்லையில், 4 நாள்களாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோப் மாவட்டத்தின், சம்பாஸா பகுதியில் பதுங்கி செய... மேலும் பார்க்க

தென் கொரிய முன்னாள் அதிபரின் மனைவி கைது!

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.கிம் கியோனுக்கு எதிராக பங்குச் சந்தை மோசடி, தேர்தல் தலையீடு, லஞ்சப் புகார் உள்பட 16 குற்றச்சாட... மேலும் பார்க்க

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவு!

நியூசிலாந்தின் லோயர் நார்த் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு மறக்கமுடியாத பாடத்தைக் கற்பிப்போம்! பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை

சிந்து நதி நீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற... மேலும் பார்க்க