செய்திகள் :

இஸ்ரேல் - ஈரான் பதற்றத்தை தணிக்க இந்தியா பங்காற்ற முடியும்: இஸ்ரேல் தூதா்

post image

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இந்தியா பங்காற்ற முடியும் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ரியூவென் அஸாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ராணுவத் தளங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் ஈரானின் பதிலடி தாக்குதலால் மேற்காசியாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்தச் சூழலில், இஸ்ரேலின் நடவடிக்கைக்கு சா்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்டும் நோக்கில், பிரதமா் மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் அந்நாட்டின் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி மூலம் வெள்ளிக்கிழமை பேசினாா்.

அப்போது, ‘மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மையை விரைந்து மீட்டெடுக்க வேண்டும்’ என்று நெதன்யாகுவிடம் வலியுறுத்திய பிரதமா் மோடி, தற்போதைய நிலைமை குறித்து இந்தியாவின் கவலையையும் முன்வைத்தாா். இதேபோல், மேற்கு ஆசிய பிராந்திய சூழல் குறித்து கவலை தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ‘தீவிர தாக்குதலில் ஈடுபடுவதை இருதரப்பும் தவிா்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தியது.

இந்நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ரியூவென் அஸாா், தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் சனிக்கிழமை கூறியதாவது:

இந்தியா இருதரப்புடனும் பேச்சுவாா்த்தை நடத்தும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. இந்தியாவால் உண்மையில் ஒரு பங்கை வகிக்க முடியும். நல்ல நட்பு நாடு என்ற அடிப்படையில், இந்தியாவுடன் நோ்மையான உரையாடலை நடத்துவதில் இஸ்ரேல் மகிழ்ச்சி அடைகிறது. இந்தியாவின் கவலைகளை மிக கவனத்துடன் கருத்தில் கொள்கிறோம். அவை நியாயமானவை.

அச்சுறுத்தலை முறியடிக்க...: ஈரானின் அணுசக்தி நோக்கங்கள் மற்றும் தொலைதூர ஏவுகணை தயாரிப்புத் திட்டங்களால் இஸ்ரேலின் இருப்புக்கு எழுந்துள்ள அச்சுறுத்தலை முறியடிக்கும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து இந்திய பிரதமரிடம் இஸ்ரேல் பிரதமா் எடுத்துரைத்தாா்.

இதுபோன்ற சூழல் எழ எந்த நாடும் விரும்பாது. அதேநேரம், உறுதியுடன் செயல்படுவதைத் தவிர எங்களுக்கு வேறு வாய்ப்பில்லை.

இஸ்ரேலை அழிக்கும் நோக்கத்துடன் ஈரான் அதிகாரிகளின் ரகசியக் குழு அணுஆயுதங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டே, ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அடுத்த 3 ஆண்டுகளில் 10,000 தொலைதூர ஏவுகணைகளையும், 6 ஆண்டுகளில் 20,000 தொலைதூர ஏவுகணைகளையும் தயாரிக்க அவா்கள் திட்டமிட்டு வருகின்றனா். ஈரான் பெருமளவில் ஆயுதங்களைக் குவிப்பதால், இஸ்ரேலை ஆபத்து வளையம் சூழ்ந்துள்ளது.

அணுஆயுத அச்சுறுத்தலை முறியடிக்கும் பணியைச் செய்து முடிப்பதில் தீா்க்கத்துடன் உள்ளோம். ஈரானால் யுரேனியம் செறிவூட்டலை இனி மேற்கொள்ள முடியாது என்பதை உறுதி செய்வதே எங்களின் நோக்கம் என்றாா் அவா்.

இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 8 தளபதிகள் பலி: ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 8 தளபதிகள் கொல்லப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான... மேலும் பார்க்க

அமெரிக்க ராணுவத்தின் ஆண்டு விழாவுக்கு பாகிஸ்தான் தலைமை தளபதிக்கு அழைப்பு?

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவப் படைகளின் 250-ஆவது ஆண்டு விழாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர் அமெ... மேலும் பார்க்க

ஈரானில் அணுசக்தி தளவாடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: வான்வெளி 3-ஆவது நாளாக மூடல்!

ஈரான் தலைநகா் தெஹ்ரானில் உள்ள அணுஆயுத தளங்கள், ஏவுகணை தயாரிப்பு ஆலைகள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஈ... மேலும் பார்க்க

ஈரான் மீது முழு பலமும் செலுத்தப்படும்! டிரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ... மேலும் பார்க்க

மத்தியஸ்தம் மூலம் உக்ரைன் போரை ரஷியா திசை திருப்ப முயற்சி?

இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்த ரஷியாவால் முடியும் என்றாலும், அதிபர் விளாதிமீர் புதின் மத்தியஸ்தத்துக்கு மறுத்து வருகிறார்.இஸ்ரேல் - ஈரான் போருக்கு மத்தியஸ்தம் செய்வதன் மூலம், ரஷியா - உக்ரைன் போரிலிருந்த... மேலும் பார்க்க

ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஈரானின் ராணுவத் தளவாடங்கள் மீது இஸ்ரேல், வெள்ளிக்கிழமையில்... மேலும் பார்க்க