செய்திகள் :

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! கடும் சேதம்

post image

‘ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டுத் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 63 பேர் காயமடைந்தனர்,

ஏராளமான கட்டங்களுக்கு கடும் சேதமேற்பட்டிருப்பதாக விடியோக்கள் மூலம் தெரிய வருகிறது.

ஈரான் தலைநகா் தெஹ்ரானில் உள்ள அணுஆயுத தளங்கள், ஏவுகணை தயாரிப்பு ஆலைகள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் தனது வான் எல்லைகளை ஈரான் மூடியிருந்தது.

டெல் அவிவ்

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக, வெள்ளிக்கிழமை நள்ளிரவில், தலைநகர் டெல் அவிவ் நகரம் மீது ஈரான் ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியது. இதில் ஏராளமான கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்திருக்கும் விடியோக்களும் வெளியாகியுள்ளன.

டெல் அவிவ் நகரின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் காயமடைந்தவர்கள் இசிலோவ் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் லேசான காயங்கள் அடைந்திருப்பதாகவும், ஒரு சிலர் மட்டும் படுகாயமடைந்திருப்பதகாவும் கூறப்படுகிறது.

பத்துக்கும் மேற்பட்ட ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளன. இஸ்ரேலி பாதுகாப்பு அமைப்பால் சில ஏவுகணைகள் முறியடிக்கப்பட்டன. நாட்டில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் பேரிடர் மீட்புப் படை விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களின் விடியோக்களை மக்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்றும், தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தக்கூடும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

ஈரான் மீது, ‘ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேலில் நடத்திய தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதன் மூலம், இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது.

பதுங்கியிருந்து இரையைப் பிடிக்கும் சிங்கத்தைப் போல, ஈரானின் அணுசக்தி திட்டங்களை நிா்மூலமாக்குவதற்காக ஆண்டுக்கணக்கில் திட்டமிட்டு அதனை செயல்படுத்தத் தொடங்கியுள்ளதால் இந்த தாக்குதலுக்கு ‘எழும் சிங்கம்’ என்று இஸ்ரேல் பெயர் வைத்திருக்கிறதாம்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் உள்பட பல பகுதிகள் மீது ஈரான் நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது.

இந்த தாக்குதலில், இஸ்ரேலின் மத்திய பகுதியான ரிஷான் லெஸியன் நகரில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. கட்டடங்களில் விழுந்த ஏவுகணைகளால் பல கட்டடங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தாக்குதலில், இஸ்ரேலின் கட்டடங்கள் நொறுங்கிக் கிடக்கும் விடியோக்களும் வெளியாகி வருகிறது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர். வீடுகள், கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

தொடங்கியதா போர்?

60 சதவீதத்துக்கும் மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பு ஈரானிடம் உள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ அச்சத்தில் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்.

ஈரானின் சுமாா் 100 நிலைகள் மீதான முதல்கட்ட தாக்குதலில் இஸ்ரேலின் 200 போா் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், நாட்டின் மொஸாட் உளவு அமைப்பின் மூலம் ஈரானுக்குள் ட்ரோன்கள் கடத்திச் செல்லப்பட்டு, அவற்றின் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஈரானின் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (ஐஆா்ஜிசி) தலைமைத் தளபதி ஹுசைன் சலாமி, அந்தப் படையின் ஏவுகணை திட்டத் தலைவா் அமீா் அலி ஹாஜிசாதே உள்ளிட்டோா் கொல்லப்பட்டதாகவும் அணுசக்தி விஞ்ஞானிகள் சிலரும் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஈரான் மீது முழு பலமும் செலுத்தப்படும்! டிரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ... மேலும் பார்க்க

மத்தியஸ்தம் மூலம் உக்ரைன் போரை ரஷியா திசை திருப்ப முயற்சி?

இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்த ரஷியாவால் முடியும் என்றாலும், அதிபர் விளாதிமீர் புதின் மத்தியஸ்தத்துக்கு மறுத்து வருகிறார்.இஸ்ரேல் - ஈரான் போருக்கு மத்தியஸ்தம் செய்வதன் மூலம், ரஷியா - உக்ரைன் போரிலிருந்த... மேலும் பார்க்க

ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஈரானின் ராணுவத் தளவாடங்கள் மீது இஸ்ரேல், வெள்ளிக்கிழமையில்... மேலும் பார்க்க

நைஜீரியா: மர்ம நபர்களின் கொடூரத் தாக்குதலில் 100 பேர் பலி!

நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களின் தாக்குதலில் 100 பேர் பலியாகினர்.மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெனுவே மாகாணத்தில் யெலேவடா கிராமத்தில், திடீரென புகுந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக த... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் பதற்றத்தை தணிக்க இந்தியா பங்காற்ற முடியும்: இஸ்ரேல் தூதா்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இந்தியா பங்காற்ற முடியும் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ரியூவென் அஸாா் சனிக்கிழமை தெரிவித்தாா். ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ராணுவத்... மேலும் பார்க்க

இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இந்திய வம்சாவளியினா் உதவிக்கரம்!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் குடிமக்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க இணையவழியில் பொது நிதி திரட்டும் நடவடிக்கையை இந்திய வம்சாவளியினா் தொடங்கியுள்ளனா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் ஏற்... மேலும் பார்க்க