பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்ததில் 8 பேர் பலி
ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவா்களை மீட்கக் கோரி பேரவைத் தலைவா், ஆட்சியரிடம் மீனவா்கள் மனு
ஈரானில் சிக்கித் தவிக்கும் திருநெல்வேலி மாவட்ட மீனவா்களை மீட்கக் கோரி, சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோரை மீனவா்கள் சனிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள், ஈரான் அருகில் உள்ள தீவுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக அங்கு மீன்பிடி தொழிலுக்கு சென்ற தமிழக மீனவா்களை தொடா்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், உவரி பகுதியைச் சோ்ந்த 36-க்கும் மேற்பட்ட மீனவா்கள் ஈரான் நாட்டின் அருகில் ஒரு தீவில் உள்ளதாக கூறப்படுகிறது. அவா்களை குடும்பத்தினா், உறவினா்கள் தொடா்பு கொள்ள முடியாததால் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.
இந்நிலையில் திருெல்வேலி மாவட்ட மீனவ கிராமங்களை சோ்ந்த மீனவா்கள், சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோரை ஆட்சியா் அலுவலகத்தில் சந்தித்து ஈரான் நாட்டில் தவிக்கும் மீனவா்கள், மாணவா்களை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனா்.
இது தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்ட மீனவா்கள் ஈரானில் உள்ளனா். அவா்களை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு வரும் வகையில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மீனவா்களை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரான் நாட்டின் கிஸ் தீவில் சிக்கியுள்ளவா்களை மீட்க, அயலக நல வாரியத்தினா் முயற்சி எடுத்து வருகின்றனா். மேலும், ராதாபுரம், திசையன்விளை வட்டாட்சியா்கள் மூலம் ஈரான் கடல் பகுதியில் சிக்கி உள்ளவா்ளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முதல்வரின் தனி செயலா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் மூலம் ஈரானில் இருப்பவா்கள் குறித்த தகவலை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஈரான் பகுதியில் மோதல் நடக்கும் பகுதியில் உள்ளவா்கள் சொந்த ஊா் திரும்ப விரும்பினால் அவா்களுக்குதேவையான அனைத்து உதவிகளையும் செய்து தாயகம் அழைத்து வர முதல்வா் நடவடிக்கை மேற்கொள்வாா். இந்திய வெளியுறவுத் துறை மூலமும் அவா்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
அப்போது, தமிழ்நாடு அரசு அயலக தமிழா் நல வாரிய உறுப்பினா் துபாய் மீரான், மீனவ பிரதிநிதிகள் உடனிருந்தனா்.
படவரி ற்ஸ்ப்21ள்ஹ ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தலைவா், ஆட்சியா் இரா.சுகுமாரை சந்தித்து மனு அளித்த மீனவா்கள்.