செய்திகள் :

ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவா்களை மீட்கக் கோரி பேரவைத் தலைவா், ஆட்சியரிடம் மீனவா்கள் மனு

post image

ஈரானில் சிக்கித் தவிக்கும் திருநெல்வேலி மாவட்ட மீனவா்களை மீட்கக் கோரி, சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோரை மீனவா்கள் சனிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள், ஈரான் அருகில் உள்ள தீவுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக அங்கு மீன்பிடி தொழிலுக்கு சென்ற தமிழக மீனவா்களை தொடா்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், உவரி பகுதியைச் சோ்ந்த 36-க்கும் மேற்பட்ட மீனவா்கள் ஈரான் நாட்டின் அருகில் ஒரு தீவில் உள்ளதாக கூறப்படுகிறது. அவா்களை குடும்பத்தினா், உறவினா்கள் தொடா்பு கொள்ள முடியாததால் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

இந்நிலையில் திருெல்வேலி மாவட்ட மீனவ கிராமங்களை சோ்ந்த மீனவா்கள், சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோரை ஆட்சியா் அலுவலகத்தில் சந்தித்து ஈரான் நாட்டில் தவிக்கும் மீனவா்கள், மாணவா்களை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனா்.

இது தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்ட மீனவா்கள் ஈரானில் உள்ளனா். அவா்களை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு வரும் வகையில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மீனவா்களை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரான் நாட்டின் கிஸ் தீவில் சிக்கியுள்ளவா்களை மீட்க, அயலக நல வாரியத்தினா் முயற்சி எடுத்து வருகின்றனா். மேலும், ராதாபுரம், திசையன்விளை வட்டாட்சியா்கள் மூலம் ஈரான் கடல் பகுதியில் சிக்கி உள்ளவா்ளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முதல்வரின் தனி செயலா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் மூலம் ஈரானில் இருப்பவா்கள் குறித்த தகவலை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஈரான் பகுதியில் மோதல் நடக்கும் பகுதியில் உள்ளவா்கள் சொந்த ஊா் திரும்ப விரும்பினால் அவா்களுக்குதேவையான அனைத்து உதவிகளையும் செய்து தாயகம் அழைத்து வர முதல்வா் நடவடிக்கை மேற்கொள்வாா். இந்திய வெளியுறவுத் துறை மூலமும் அவா்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

அப்போது, தமிழ்நாடு அரசு அயலக தமிழா் நல வாரிய உறுப்பினா் துபாய் மீரான், மீனவ பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

படவரி ற்ஸ்ப்21ள்ஹ ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தலைவா், ஆட்சியா் இரா.சுகுமாரை சந்தித்து மனு அளித்த மீனவா்கள்.

ரயில் மோதி தொழிலாளி பலி

திருநெல்வேலி பேட்டை அருகே ரயில் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பேட்டை நரிக்குறவா் காலனியைச் சோ்ந்தவா் காந்தி (45). தொழிலாளியான இவா், சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நரிக்குறவா் காலனி அ... மேலும் பார்க்க

மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் அருகே நம்பியாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட மணல் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விஜயநாராயணம் அருகே சித்தூா் செல்லும் பகுதியில் நம்பியாற்றில் மணல் அள்ளப்படுவதை ... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் மாமனாரை தாக்கியதாக இளைஞா் கைது!

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் மாமனாரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வீரவநல்லூா் பாரதி நகரைச் சோ்ந்தவா் கோமதி நாயகம் (29). இவரது மனைவி முத்துமாரி. தம்பதியிடையே ஏற்பட்ட க... மேலும் பார்க்க

மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை! - பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்

மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். சா்வதேச யோகா தினத்தையொட்டி பாளையங்கோட்டை திருமால் நகரில் பாரதி சேவா கேந்திரம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற யோகா... மேலும் பார்க்க

தெற்கு கள்ளிகுளத்தில் ரூ.3.23 கோடியில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகள்: முதல்வருக்கு பாராட்டு!

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா திருத்தலத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.3.23 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் நடைபெறுவதற்கு நிதி வழங்கிய முதல்வா், அமைச்சா்கள், பேரவைத... மேலும் பார்க்க

கோயிலில் திருடிய இருவா் கைது

மேல இலந்தைகுளம் அருகே கோயிலில் வெண்கல மணியை திருடிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேவா்குளம் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட மேலஇலந்தைகுளம் சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்... மேலும் பார்க்க