செய்திகள் :

ஈரானுக்கு அமெரிக்கா அச்சுறுத்தல்! டிரம்ப்பின் முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கருத்துக் கணிப்பு!

post image

ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவு குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடாவிட்டால், விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, இஸ்ரேல் - ஈரான் போருக்கு மத்தியில் பெரும் அமைதியின்மை நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஈரானுக்கு அமெரிக்காவின் அச்சுறுத்தல் குறித்து, 1000 பேரிடம் தி வாஷிங்டன் போஸ்ட் கருத்துக் கணிப்பு நடத்தியது.

ஆய்வில், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் முடிவுக்கு 47 சதவிகிதத்தினர் ஆதரவும், 24 சதவிகிதத்தினர் எதிர்ப்பும், 29 சதவிகிதத்தினர் கருத்துக் கூற விரும்பவில்லை என்று தெரிய வந்தது.

அமெரிக்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியில் மூன்றில் இரண்டு பங்கு கட்சியினர், அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சியில், 47 சதவிகிதத்தினர் ஆதரவாகவும், 24 சதவிகிதத்தினர் எதிர்ப்பும், 29 சதவிகிதத்தினர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அதேபோல, டிரம்பின் ஆதரவாளர்களில், 46 சதவிகிதத்தினர் ஆதரவாகவும், 26 சதவிகிதத்தினர் எதிர்ப்பும், 28 சதவிகிதத்தினர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

இதையும் படிக்க:ஆர்சிபி கூட்ட நெரிசல் விவகாரம்! 3 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதத்துடன் மசோதா!

அதானி ஒப்பந்தம் ரத்தானதால் மிகவும் ஏமாற்றமடைந்தேன்: கென்யா முன்னாள் பிரதமர்!

கென்யாவின் பன்னாட்டு விமான நிலையத்தை விரிவுப்படுத்தி மேம்படுத்துவதற்கான அதானியின் ஒப்பந்தம் ரத்தானபோது மிகவும் ஏமாற்றமடைந்ததாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ராயிலா ஒடிங்கா தெரிவித்துள்ளார். கென்யா தலைந... மேலும் பார்க்க

இந்தியாவுக்காக வான்வழியைத் திறந்த ஈரான்!

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள 1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறி தாயகம் செல்ல, அந்நாடு பிரத்யேகமாக தனது வான்வழியைத் திறந்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையில் போர் தொடங்கியுள்ள நிலையில், இருநாடுகளும் த... மேலும் பார்க்க

ஈரானுக்காக ஒருநாளுக்கு ரூ. 8,600 கோடி செலவிடும் இஸ்ரேல்!

ஈரான் மீதான போரில் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையேயான போரில் அமெரிக்காவும் களமிறங்கும் சூழல் ஏற்படும் அளவுக்கு போர் பெரிதாகி ... மேலும் பார்க்க

கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்

கனடாவில் இந்திய மாணவி மர்மமான முறையில் பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்யா தியாகி என அடையாளம் காணப்பட்ட அந்த மாணவி உயர் படிப்புக்காக கனடாவுக்குச் சென்றிருந்தார். இவர் கடந்த ஜூன் 17ஆம் த... மேலும் பார்க்க

கிரீஸ்: 2 மீன்பிடி படகுகளில் வந்த 600 அகதிகள் மீட்பு!

கிரீஸ் நாட்டின் தென்கடல் பகுதியில் 2 மீன்பிடி படகுகளில் வந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட அகதிகளை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர். கிரீஸின் தெற்குப் பகுதியிலுள்ள கவ்டோஸ் தீவின் கடல்பகுதியி... மேலும் பார்க்க

ஈரானையே உலுக்கிய இஸ்ரேலின் பெண் உளவாளி! தடயமே இல்லாமல் மாயமான கதை!!

பல ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போலத்தான் ஈரானிலும் நடந்தது. ஈரானுக்குள் நுழைந்து முக்கிய தலைவர்கள், உயர் அதிகாரிகளின் வீட்டுக்குள் நுழைந்த இஸ்ரேலின் பெண் உளவாளி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இஸ்ரேல்... மேலும் பார்க்க