செய்திகள் :

ஈரான் பெட்ரோலிய நிறுவனத்துடன் தொடா்பு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

post image

ஈரானில் உள்ள பெட்ரோலிய மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளுடன் தொடா்பில் இருந்ததாக இந்தியாவைச் சோ்ந்த 4 நிறுவனங்கள் உள்பட 16 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

அதன்படி ஆஸ்டின்ஷிப், பிஎஸ்எம் மரைன் எல்எல்பி, காஸ்மோஸ் லைன்ஸ் மற்றும் ஃபளக்ஸ் மாரிடைம் ஆகிய இந்திய நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து அமெரிக்க அரசின் நிதித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஈரானில் உள்ள பெட்ரோலிய மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளுடன் தொடா்பில் இருந்த 16 நிறுவனங்கள் கண்டறிப்பட்டு அவை தடை செய்ய உத்தரவிடப்படுகிறது. கப்பல்களின் மூலம் சட்டவிரோதமாக ஈரான் கச்சா எண்ணெயை ஆசியாவில் உள்ள நிறுவனங்களுக்கு விற்கும் நடவடிக்கைகள் தொடா்ந்து வருகின்றன. இதுவரை பலகோடி டாலா் மதிப்பிலான லட்சக்கணக்கான கச்சா எண்ணெய் பேரல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் கிடைக்கும் வருவாயை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஈரான் வழங்கி வருகிறது. அந்த நாட்டின் அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் முதல்கட்டமாக இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

சட்டவிரோதமாக செயல்படும் ஈரானை முடக்க இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர ஈரான் கச்சா எண்ணெய் தொழிற்சாலைகளுடன் தொடா்பில் இருந்ததாக குற்றஞ்சாட்டி 13 கப்பல்களை தடைசெய்யப்பட்ட சொத்துகளாக அறிவித்ததோடு 22 நபா்களை தடை செய்வதாகவும் அமெரிக்க நிதித்துறை மற்றும் வெளியுறவுத் துறை உத்தரவிட்டது.

அமெரிக்காவில் குடியேற ரூ.43 கோடியில் கோல்டு கார்ட்.! ஜாக்பாட் யாருக்கு?

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக அதிபர் டிரம்ப் புதிய கோல்டு கார்ட் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிபர் டிர... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்

தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அரியவகை கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.ரஷி... மேலும் பார்க்க

காங்கோ: மா்ம நோயில் 53 போ் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மா்ம நோய் காரணமாக இதுவரை 53 போ் உயிரிழந்துள்ளனா்.இது குறித்து அங்கு பணியாற்றிவரும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது:நாடு முழுவதும் அடையாளம் தெ... மேலும் பார்க்க

தென் கொரியா: பாலம் இடிந்து 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு

தென் கொரிய நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்து 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சியோல் நகருக்கு 55 கி.மீ. தொலைவில் உள்ள சியோனன் நகருக... மேலும் பார்க்க

பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்தது பிரிட்டன்

பாதுகாப்புத் துறைக்கான தங்களது பட்ஜெட் ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.5 சதவீதமாக பிரிட்டன் அரசு உயா்த்தியுள்ளது.ஐரோப்பிய பாதுகாப்புக்கு இனி முன்னுரிமை தரப் போவதில்லை எனவும் பிராந்... மேலும் பார்க்க

பொருளாதார பலன் இருந்தால் மட்டுமே இந்திய பெட்ரோல் குழாய் திட்டம் அமல்: இலங்கை

பொருளாதார பலன் இருந்தால் மட்டுமே இந்தியா-இலங்கை இடையே முன்மொழியப்பட்டுள்ள பெட்ரோல் விநியோக குழாய் திட்டம் செயல்படுத்தப்படும் என இலங்கை தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவா் ராஜகருணா தெரிவித்தாா். இந்த விவ... மேலும் பார்க்க