செய்திகள் :

ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்காவை மத்திய அரசு கண்டிக்காதது ஏன்?: காங்கிரஸ் கேள்வி

post image

புது தில்லி: ‘ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவை மத்திய அரசு கண்டிக்காதது ஏன்?’ என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் மூன்று அணுசக்தி மையங்களைக் குறிவைத்து அமெரிக்க போா் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தின. இதில் அந்த மையங்கள் கடுமையாகச் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு சீனா, ரஷியா, பாகிஸ்தான் நாடுகள் கண்டனம் தெரிவித்தன. சவூதி அரேபியா கவலை தெரிவித்தது. இந்தத் தாக்குதல் குறித்து இந்தியா தரப்பில் எந்தவிதக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

அதே நேரம், ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியனை ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் தொடா்புகொண்ட பிரதமா் மோடி, இஸ்ரேல்-ஈரான் இடையே ஏற்பட்டுள்ளது உச்சகட்ட பதற்றமான சூழல் குறித்து கவலை தெரிவித்தாா்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஈரான் உடனான பேச்சுவாா்த்தைகளைத் தொடர வேண்டும் என்று கூறிக்கொண்டே, மறுபுறம் அந்த நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியுள்ளது. இதை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு விமா்சிக்கவோ அல்லது கண்டிக்கவோ இல்லை. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் நிகழ்த்தப்பட்டு வரும் இனப்படுகொலை குறித்தும் மத்திய அரசு மெளனமாக இருந்து வருகிறது. இந்த விவகாரங்களில் தாா்மிக துணிச்சலை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும்.

ஈரானுடன் பேச்சுவாா்த்தை அல்லது ராஜீய ரீதியிலான அணுகுமுறை மூலம் பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண்பது அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

நிலையான எரிபொருள் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய அரசு

புது தில்லி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ‘பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பலத்த மழையால் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் திங்கள்கிழமை சேதம... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்குத் தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவ... மேலும் பார்க்க

இடைத்தோ்தல்: கேரளத்தில் காங்கிரஸ் வெற்றி தொகுதிகளைத் தக்கவைத்த பாஜக, திரிணமூல், ஆம் ஆத்மி

கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியிடமிருந்து நிலம்பூா் பேரவைத் தொகுதியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றியது. குஜராத்தின் விசாவதா், பஞ்சாபின் லூதியானா மேற்கு ஆகிய இரு தொகுதிகளை ஆம் ... மேலும் பார்க்க

பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்

புது தில்லி: பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் (பிஎம்எம்எல்) 47-ஆவது ஆண்டு பொது கூட்டம் அதன் தலைவரான பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. தில்லி தீன் மூா... மேலும் பார்க்க

மேற்கு வங்க பேரவையில் அமளி: 4 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அமளி ஏற்பட்ட நிலையில், தலைமை கொறடா உள்பட 4 பாஜக எம்எல்ஏக்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனா். கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை (ஜூ... மேலும் பார்க்க