செய்திகள் :

ஈரோடு: கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை; திமுக கவுன்சிலர் உள்பட இருவர் கைது - நடந்தது என்ன?

post image

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்துக்குட்பட்ட பெத்தாம்பாளையம் பேரூராட்சிப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பெத்தாம்பாளையம் வள்ளி நகரைச் சேர்ந்த முத்துசாமி (50) என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, அவரிடம் இருந்து 7 லிட்டர் கள்ளச்சாராயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முத்துசாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், எலையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரது தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.

கைது

இதையடுத்து, சுரேஷ்குமார் தோட்டத்தில் சோதனை செய்தபோது கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருள்கள், பாத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, சுரேஷ்குமாரை மதுவிலக்கு போலீஸார் கைது செய்தனர்.

சுரேஷ்குமார் பெத்தாம்பாளையம் பேரூராட்சி 3-ஆவது வார்டு திமுக கவுன்சிலராகவும், பெருந்துறை கிழக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் கண்களை பசையால் ஒட்டிய நண்பர்கள் - விடுதியில் நடந்த விபரீதம்

பள்ளி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் கண்களில் பசையை சக மாணவர்கள் தடவி விட்டுள்ளனர். இதனால் அவர்கள் காலையில் மிகுந்த வலியுடன் விழித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது மருத்துவமனையில... மேலும் பார்க்க

சேலம்: கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த அரசு மருத்துவர், புரோக்கர் கைது

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்து வருவதாக சுகாதாரத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்ப... மேலும் பார்க்க

மதுரை: போன் செய்து வரச் சொன்ன கணவர் கொலை; பார்க்கச் சென்ற இடத்தில் அதிர்ந்த மனைவி!

மதுரை பார்க் டவுன் 2-வது தெருவைச் சேர்ந்த ராஜ்குமார், முனிச்சாலைப் பகுதியில் பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சந்திரகலா என்ற மனைவியும் சந்தீப் என்ற மகனும் உள்ளனர். ராஜ்குமார் நேற்று இரவு தன... மேலும் பார்க்க

``மதத்தையும், துறவிகளையும் அவமதித்தால்'' - திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு; பகிரங்க மிரட்டல்

பாலிவுட் நடிகை திஷா பதானிபாலிவுட் நடிகை திஷா பதானி உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர் ஆவார். அங்குள்ள வீட்டில் திஷா பதானியின் பெற்றோர் வசித்து வருகின்றனர். அந்த வீட்டின் மீது மர்ம நபர் திடீரென துப... மேலும் பார்க்க

சருமத்தில் ஒவ்வாமை; உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்; ஜிம்மில் கொடுத்த புரோட்டின் பவுடர் காரணமா?

நீலகிரி மாவட்டம் குன்னூர், அட்டடி பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. அ.தி.மு.க -வைச் சேர்ந்த இவர் தற்போது குன்னூர் நகர மன்றத்தின் உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளி... மேலும் பார்க்க

சேலம்: ரவுடியுடன் திருமணம் மீறிய உறவிலிருந்த பெண்ணுக்கு டார்ச்சர்; முதியவர் அடித்துக் கொலை

சேலம் மாநகர் சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (65). விவசாயியான இவர் கடந்த 18.08.2025 அன்று வீட்டில் படுத்திருந்த போதும் மின்விசிறி கழன்று செல்லப்பன் தலையில் விழுந்ததாகக் கூ... மேலும் பார்க்க