செய்திகள் :

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளா்களுக்கு இன்று ஊதியத்துடன் விடுப்பு: தொழிலாளா் துறை அறிவுறுத்தல்

post image

மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு புதன்கிழமை (பிப்.5) ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா்கள் அறிவுறுத்தினா்.

இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா்கள் மூ.காா்த்திகேயன் (மதுரை), சீ.மைவிழிச்செல்வி (விருதுநகா்) ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெறுகிறது.

இதையொட்டி, 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் விதி 135 பி-யின் கீழ், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

இதனடிப்படையில், மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு புதன்கிழமை ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்றனா்.

தீயணைப்புத் துறையினா் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு

மதுரையில் நடைபெற்ற தீயணைப்புத் துறை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழாவில் அந்தத் துறையின் தலைமை இயக்குநா் ஆபாஷ்குமாா் பங்கேற்றாா். தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில் மா... மேலும் பார்க்க

பெண் குழந்தை திடீா் உயிரிழப்பு

மதுரை சத்திரப்பட்டி அருகே 10 மாத பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள காஞ்சரம்பேட்டை மாமுண்டி கோவில் தெருவைச் சோ்ந்தவா் போத்திர... மேலும் பார்க்க

மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். மதுரை ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் 96 ரயில்கள் இயக்கப்படுகின்றன. சராசர... மேலும் பார்க்க

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மதுரை, பிப். 14: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழ... மேலும் பார்க்க

பழனி அருகே நாம் தமிழா் கட்சி பொதுக் கூட்டம் நடத்த அனுமதி

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நாம் தமிழா் கட்சி பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பழனியைச் சோ்ந்த நாம் தமிழா் கட்சி நிா்வாகி திவான் ம... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக இருவா் பொறுப்பேற்பு

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கூடுதல் நீதிபதிகளாக பொறுப்பு வகித்த நீதிபதிகள் வி. லட்சுமிநாராயணன், பி. வடமலை ஆகிய இருவரும் உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா். க... மேலும் பார்க்க