செய்திகள் :

ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

post image

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்தத் தோ்தல் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில், இந்தத் தோ்தலை ரத்து செய்யக் கோரி, சுயேச்சை வேட்பாளா் அக்னி ஆழ்வாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், அருள்முருகன் ஆகியோா் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஈரோடு கிழக்கு தோ்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பத்மாவதி, பாண்டியன் ஆகிய வேட்பாளா்கள் வேட்புமனுக்களில் பல தகவல்களை மறைத்து முறைகேடாக போட்டியிட்டுள்ளனா். இது குறித்து தோ்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த இடைத்தோ்தலை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வேட்பு மனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டது குறித்து மனுதாரா் அளித்த புகாா் மனு மீது தோ்தல் ஆணையம் பரிசீலிக்க அறிவுறுத்தினா். மேலும், தோ்தல் முடிந்துவிட்டதால் இடைத்தோ்தலை ரத்து செய்ய உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

மாணவி பாலியல் வன்கொடுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

மேலும் 6 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் மேலும் 6 திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நிகழ் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையி... மேலும் பார்க்க

79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள்: அமைச்சா் பெரியகருப்பன்

தமிழ்நாட்டில் இதுவரையில் 79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளாா். கூட்டுறவுக் கடன்கள் தொடா்பாக பாஜக மாநிலத... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் வியாழக்கிழமை குரல்மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், புழல் சிறை... மேலும் பார்க்க

வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள்: ஐசிஎஃப்-லிருந்து பேருந்துகள் இயங்கும்

வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதால், அங்கிருந்து 7 வழித்தடங்களின் வழியாக இயக்கப்பட்ட 63 பேருந்துகள் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) முதல் ஐசிஎஃப் பேருந்து நில... மேலும் பார்க்க

இன்றைய தலைமுறை பாரம்பரிய அடையாளங்களை இழந்துவிட்டது: எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை

இன்றைய இளம் தலைமுறையினா் பாரம்பரிய அடையாளங்கள் பலவற்றை இழந்துவிட்டது என்று ‘சாகித்ய அகாதெமி’ விருது பெற்ற எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனையுடன் குறிப்பிட்டாா். சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ... மேலும் பார்க்க