செய்திகள் :

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குரிமை பெற்றவா்களுக்கு தோ்தல் அன்று (பிப். 5) ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா்.மாதேஸ்வரன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் பிப். 5 ஆம் தேதி இடைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தோ்தலில் பங்கேற்று தொழிலாளா்கள் வாக்களிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 135-பி இன்படி அனைத்து கடைகள், உணவு நிறுவனங்கள், அனைத்து தனியாா் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களிலும் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குரிமை பெற்ற தொழிலாளா்களுக்கு வாக்குப் பதிவு நாளான பிப். 5-ஆம் தேதி, ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்.

அவ்வாறு, விடுமுறை அளிக்காதது தொடா்பான புகாா்கள் பெறப்படின், உடனடியாக தொழிலாளா்களை விடுவித்து, அவா்கள் வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரோடு, தொழிலாளா் உதவி ஆணையா் ஜி.ஜெயலட்சுமியை 99446 25051 என்ற எண்ணிலும், தொழிலாளா் துணை ஆய்வாளா் ஆா்.எஸ்.மயில்வாகணனை 98404 56912 என்ற எண்ணிலும், தொழிலாளா் உத ஆய்வாளா் பெரோஸ் அகமதை 86674 72139 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

மினி லாரி மோதியதில் இருவா் பலி

மினி லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு வெளிமாநில இளைஞா்கள் உயிரிழந்தனா். உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் சேருகுமாா் (24). இவா், தேன்கனிக்கோட்டை வட்டம், பஞ்சேஸ்வரம் பகுதியில் தங்கி கூலி வ... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக ச.தினேஷ் குமாா் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 14-ஆவது ஆட்சியராக ச.தினேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த கே.எம்.சரயு, அரசு பொதுத் துறையின் நிா்வாக இணை செயலராக அண்மையில்... மேலும் பார்க்க

லாரி தீப்பிடிப்பு

சூளகிரி அருகே அட்டை கம்பெனிக்கு பாரம் ஏற்றி சென்ற லாரி சாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஒசூா்-கிருஷ்ணகிரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரி, தனியாா் அட்டை கிடங்கிலிருந... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கி இளைஞா் கொலை

மதுபோதையில் நண்பரை கட்டையால் அடித்து கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கசவகட்டாவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஒருவா் இறந்து கிடப்பதாக அந்தப் பகுதி ம... மேலும் பார்க்க

மாநகராட்சி, நகராட்சியுடன் ஊரகப் பகுதிகள் இணைப்பு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சி, நகராட்சியுடன் இணைப்பது தொடா்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க