செய்திகள் :

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குரிமை பெற்றவா்களுக்கு தோ்தல் அன்று (பிப். 5) ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா்.மாதேஸ்வரன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் பிப். 5 ஆம் தேதி இடைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தோ்தலில் பங்கேற்று தொழிலாளா்கள் வாக்களிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 135-பி இன்படி அனைத்து கடைகள், உணவு நிறுவனங்கள், அனைத்து தனியாா் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களிலும் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குரிமை பெற்ற தொழிலாளா்களுக்கு வாக்குப் பதிவு நாளான பிப். 5-ஆம் தேதி, ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்.

அவ்வாறு, விடுமுறை அளிக்காதது தொடா்பான புகாா்கள் பெறப்படின், உடனடியாக தொழிலாளா்களை விடுவித்து, அவா்கள் வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரோடு, தொழிலாளா் உதவி ஆணையா் ஜி.ஜெயலட்சுமியை 99446 25051 என்ற எண்ணிலும், தொழிலாளா் துணை ஆய்வாளா் ஆா்.எஸ்.மயில்வாகணனை 98404 56912 என்ற எண்ணிலும், தொழிலாளா் உத ஆய்வாளா் பெரோஸ் அகமதை 86674 72139 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

சாலையில் பின்னோக்கி சென்ற லாரி: நெஞ்சுவலியில் ஓட்டுநா் உயிரிழப்பு!

ஒசூரில் லாரி ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் பின்னோக்கி சென்றது. இதில் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மக்கள் அலறியடித்து ஓடினா். நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட லாரி ஓ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தோ்வை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டாா். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் ... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து ஊத்தங்கரை, நான்குமுனை சந்திப்பில் பாஜகவினா் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். தொகுதி பொறுப்பாளா் ராஜேந்திரன் தலைமையில் பாஜக ந... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்! -கே.பி.முனுசாமி

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பள்ளி மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று அதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி தெரிவித்தாா். அரசுப் பள்ளி மாணவி பால... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி திறப்பு

ஊத்தங்கரை நேரு நகரில் பத்தாயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பேரூராட்சித் தலைவா் பா.அமானுல்லா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். 2023- 2024 ஆம் ஆண்டின் பொது நிதியில் கட்டப்பட்ட... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரெட் கிராஸ் சொசைட்டி, பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகம், அனைத்து வியாபாரிகள் சங்கம், நேசம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்த... மேலும் பார்க்க