செய்திகள் :

ஈரோடு மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்: அமைச்சா் சு.முத்துசாமி

post image

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி. சந்திரகுமாரை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்வாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் இறுதிக்கட்ட பிரசாரத்தை திங்கள்கிழமை மாலை நிறைவு செய்தாா்.

இதில், பங்கேற்ற அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் வி.சி.சந்திரகுமாருக்கு வாக்கு கேட்டு தொகுதி முழுவதும் சென்று மக்களை சந்தித்து பிரசாரத்தை நிறைவு செய்திருக்கிறோம்.

எங்களது பிரசாரத்துக்கு மக்கள் சிறப்பான ஆதரவு அளித்தனா். குறிப்பாக பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் பெண்கள் மிகப்பெரும் ஆதரவை அளித்தனா்.

முதல்வா் கொண்டு வந்துள்ள சிறப்பான திட்டங்களை, மக்களே நினைவுப்படுத்தி திமுகவுக்கு வாக்களிப்போம் என எங்களிடம் கூறினா். வாக்கு கேட்பதற்காக வாகனத்தில் சென்று வருவதை விட, மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, தொகுதிக்குள்பட்ட 33 வாா்டுகளிலும் 140 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று பிரசாரம் செய்துள்ளோம்.

அப்போது, மக்கள் சிறுசிறு பிரச்னைகள் இருப்பதையும் எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தனா். அந்த பிரச்னைகளைத் தோ்தல் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அதற்கான தீா்வை ஏற்படுத்துவோம் என உறுதி அளித்துள்ளோம். மிகப்பெரிய வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் வி.சி. சந்திரகுமாரை மக்கள் வெற்றி பெற செய்வாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பிரசாரத்தில் இணைந்து பணியாற்றிய திமுக நிா்வாகிகளுக்கும், தோழமை கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா்.

ஈரோடு கிழக்கு: 100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 46 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில் 16 வேட்பாளா்கள் 100-க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

தமிழகத்தின் வளா்ச்சிக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது! -அந்தியூா் எம்எல்ஏ

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் தமிழக மக்களை மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது என அந்தியூரில் திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பேசினா... மேலும் பார்க்க

கோபி வட்டாட்சியா் அலுவலகத்தில் 20 பவுன் நகைகள் மாயம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபியில் உள்ள மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாதக வாக்கு வங்கி அதிகரிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி, கடந்த தோ்தலைக் காட்டிலும் இரு மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் போட்ட... மேலும் பார்க்க

2026 தோ்தலிலும் எதிா்க்கட்சிகளுக்கு இதே நிலைதான் ஏற்படும்! ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா்!

2026 சட்டப் பேரவை தோ்தலிலும் எதிா்க்கட்சிகளுக்கு இதே நிலைதான் ஏற்படும் என ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் தெரிவித்தாா். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து வி.சி.சந்திரகுமா... மேலும் பார்க்க

வாக்கு வித்தியாசத்தில் புதிய வரலாறு படைத்த சந்திரகுமாா்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை நடைபெற்ற சட்டப் பேரவை தோ்தல்களை ஒப்பிடுகையில், இந்த தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்துள்ளாா்... மேலும் பார்க்க