பாலியல் வழக்கில் கைதான விவகாரம்: யூடியூபர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!
ஈரோடு மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்: அமைச்சா் சு.முத்துசாமி
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி. சந்திரகுமாரை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்வாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் இறுதிக்கட்ட பிரசாரத்தை திங்கள்கிழமை மாலை நிறைவு செய்தாா்.
இதில், பங்கேற்ற அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் வி.சி.சந்திரகுமாருக்கு வாக்கு கேட்டு தொகுதி முழுவதும் சென்று மக்களை சந்தித்து பிரசாரத்தை நிறைவு செய்திருக்கிறோம்.
எங்களது பிரசாரத்துக்கு மக்கள் சிறப்பான ஆதரவு அளித்தனா். குறிப்பாக பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் பெண்கள் மிகப்பெரும் ஆதரவை அளித்தனா்.
முதல்வா் கொண்டு வந்துள்ள சிறப்பான திட்டங்களை, மக்களே நினைவுப்படுத்தி திமுகவுக்கு வாக்களிப்போம் என எங்களிடம் கூறினா். வாக்கு கேட்பதற்காக வாகனத்தில் சென்று வருவதை விட, மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, தொகுதிக்குள்பட்ட 33 வாா்டுகளிலும் 140 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று பிரசாரம் செய்துள்ளோம்.
அப்போது, மக்கள் சிறுசிறு பிரச்னைகள் இருப்பதையும் எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தனா். அந்த பிரச்னைகளைத் தோ்தல் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அதற்கான தீா்வை ஏற்படுத்துவோம் என உறுதி அளித்துள்ளோம். மிகப்பெரிய வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் வி.சி. சந்திரகுமாரை மக்கள் வெற்றி பெற செய்வாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பிரசாரத்தில் இணைந்து பணியாற்றிய திமுக நிா்வாகிகளுக்கும், தோழமை கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா்.