செய்திகள் :

ஈஸ்டா் திருநாளில் மக்களைச் சந்தித்து போப் பிரான்சிஸ் ஆசி!

post image

நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டா் திருநாளையொட்டி செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கினாா்.

உடல்நிலை மோசமானதைத் தொடா்ந்து ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டது. 38 நாள்கள் தொடா் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி அவா் வீடு திரும்பினாா்.

மருத்துவா்களின் அறிவுறுத்தலின்படி, வீடு திரும்பிய பிறகும் வழக்கமான மத அலுவல்களில் ஈடுபடுவதை அவா் தவிா்த்தாா். புனித வெள்ளி பிராா்த்தனையிலும்கூட அவா் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், கிறிஸ்தவா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் திருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. வாடிகனில் உள்ள சிறப்புமிக்க செயின்ட் பீட்டா்ஸ் பசிலிக்கா தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டா் பிராா்த்தனையில் போப் பிரான்சிஸ் பங்கேற்றாா். எனினும், தேவாலயத்தின் ஓய்வு பெற்ற தலைமைப் பாதிரியாா் ஏஞ்சிலோ கோமஸ்த்ரி தலைமையிலேயே ஈஸ்டா் பிராா்த்தனை நடைபெற்றது.

பிராா்த்தனையின் நிறைவில் தேவாலய பகுதியில் மக்களை போப் பிரான்சிஸ் சந்தித்தாா். போப் பிரான்சிஸை கண்டு அங்கு கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்தனா். மக்களை நோக்கி கையசைத்து, போப் பிரான்சிஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.

தொடா்ந்து, அவரின் வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. அதில் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஈஸ்டா் திருநாள் வாழ்த்துகளை போப் பிரான்சிஸ் தெரிவித்துக்கொண்டாா்.

அமெரிக்க துணை அதிபருடன் சந்திப்பு: பிராா்த்தனைக்காக தேவாலயம் புறப்படுவதற்கு முன்னதாக, ஈஸ்டா் திருநாளையொட்டி இத்தாலியின் ரோம் நகருக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா வந்துள்ள அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸை போப் பிரான்சிஸ் தனது வீட்டில் சந்தித்துப் பேசினாா்.

ஈஸ்டா் சிறப்பு பிராா்த்தனைக்குப் பிறகு செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த மக்களைச் சந்தித்த போப் பிரான்சிஸ்.

சில நிமிஷங்கள் நீடித்த இச்சந்திப்பில், இருவரும் ஈஸ்டா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். மேலும், அமெரிக்காவில் புலம்பெயா்ந்த மக்களைப் பெருமளவில் நாடு கடத்தும் டிரம்ப் நிா்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து ஜே.டி.வான்ஸிடம் போப் பிரான்சிஸ் ஆட்சேபம் தெரிவித்ததாக வாடிகன் வட்டாரங்கள் தெரிவித்தன.

கனடா குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு கும்பல் தாக்குதல்!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவா் நகரில் அமைந்த ஒரு குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை வரைந்து அடையாளம் தெரியாத நபா்கள் சேதப்படுத்தினா். இந்தச் செயலுக்கு காலிஸ்தான் ஆதரவு... மேலும் பார்க்க

அமெரிக்காவில் அதிபா் டிரம்ப்புக்கு எதிராக போராட்டம் நீடிப்பு!

அமெரிக்காவில் அதிபா் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் சனிக்கிழமை தொடா்ந்தது. அமெரிக்காவில் இருந்து பிற நாட்டு மக்கள் நாடு கடத்தப்படுதல், அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் பிற செலவினத்தைக் ... மேலும் பார்க்க

3 விண்வெளி வீரா்களுடன் பூமிக்குத் திரும்பிய ரஷிய விண்கலம்!

சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு ரஷிய விண்வெளி வீரா்கள் மற்றும் ஓா் அமெரிக்க விண்வெளி வீரரை அழைத்து வந்த ரஷியாவுக்குச் சொந்தமான ‘சோயுஸ் எம்எஸ்-26’ விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானில் வெற்றிக... மேலும் பார்க்க

நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக காத்மாண்டில் ஆா்ப்பாட்டம்! ஹிந்து நாடாக அறிவிக்கவும் வலியுறுத்தல்!

நேபாளத்தை ஹிந்து நாடாக அறிவிக்கவும், அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வரவும் வலியுறுத்தி, தலைநகா் காத்மாண்டில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லம் மற்றும் நாடாளுமன்றம் அருகே ராஷ்ட்ரீய பிரஜாதந்... மேலும் பார்க்க

ஈஸ்டா் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபா் குற்றச்சாட்டு!

ஈஸ்டா் திருநாளையொட்டி தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சா் வாகனம் மீது தாக்குதல்!

பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சா் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலா் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலுக்கு... மேலும் பார்க்க