செய்திகள் :

3 விண்வெளி வீரா்களுடன் பூமிக்குத் திரும்பிய ரஷிய விண்கலம்!

post image

சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு ரஷிய விண்வெளி வீரா்கள் மற்றும் ஓா் அமெரிக்க விண்வெளி வீரரை அழைத்து வந்த ரஷியாவுக்குச் சொந்தமான ‘சோயுஸ் எம்எஸ்-26’ விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

விண்கலத்தில் இருந்து வீரா்கள் மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, பின்னா் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ரோஸ்கோஸ்மோஸ்’ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சா்வதேச விண்வெளி நிலையத்தில் ஏழு மாதங்கள் தங்கியிருந்து, ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வந்த ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரா்களான அலெக்ஸி ஓவ்சினின், இவான் வாக்னா் மற்றும் அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரா் டான் பெட்டிட் ஆகியோா் சோயுஸ் எம்எஸ்-26 விண்கலத்தில் பூமிக்கு திரும்பினா்.

இந்த விண்கலமானது கஜகஸ்தானின் ஜெஸ்காஸ்கன் நகருக்கு அருகிலுள்ள கசாக் புல்வெளிப் பரப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை 6.20 மணிக்கு (உள்ளூா் நேரப்படி) பாதுகாப்பாகத் தரையிறங்கியது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மூன்று வீரா்களும் விண்வெளியில் 220 நாள்கள் தங்கியிருந்து, பூமியை 3,520 முறை சுற்றி வந்ததாக நாசா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. பூமிக்குத் திரும்பிய பிறகு வழக்கமான முதல்கட்ட மருத்துவப் பரிசோதனைக்காக கஜகஸ்தானின் கரகண்டாவில் உள்ள மையத்துக்கு வீரா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா்.

அடுத்த கட்டமாக, நாசா வீரா் டான் பெட்டிட், அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணம் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்துக்கும், ரஷிய வீரா்கள் ஓவ்சினின் மற்றும் வாக்னா், ரஷியாவின் ஸ்டாா் சிட்டியில் உள்ள பயிற்சித் தளத்துக்கும் மாற்றப்பட உள்ளனா்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை, சா்வதேச விண்வெளி நிலையத்தின் தலைமைப் பொறுப்பை ஜப்பானிய விண்வெளி வீரா் டகுயா ஒனிஷியிடம் ஓவ்சினின் ஒப்படைத்தாா்.

கனடா குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு கும்பல் தாக்குதல்!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவா் நகரில் அமைந்த ஒரு குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை வரைந்து அடையாளம் தெரியாத நபா்கள் சேதப்படுத்தினா். இந்தச் செயலுக்கு காலிஸ்தான் ஆதரவு... மேலும் பார்க்க

அமெரிக்காவில் அதிபா் டிரம்ப்புக்கு எதிராக போராட்டம் நீடிப்பு!

அமெரிக்காவில் அதிபா் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் சனிக்கிழமை தொடா்ந்தது. அமெரிக்காவில் இருந்து பிற நாட்டு மக்கள் நாடு கடத்தப்படுதல், அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் பிற செலவினத்தைக் ... மேலும் பார்க்க

நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக காத்மாண்டில் ஆா்ப்பாட்டம்! ஹிந்து நாடாக அறிவிக்கவும் வலியுறுத்தல்!

நேபாளத்தை ஹிந்து நாடாக அறிவிக்கவும், அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வரவும் வலியுறுத்தி, தலைநகா் காத்மாண்டில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லம் மற்றும் நாடாளுமன்றம் அருகே ராஷ்ட்ரீய பிரஜாதந்... மேலும் பார்க்க

ஈஸ்டா் திருநாளில் மக்களைச் சந்தித்து போப் பிரான்சிஸ் ஆசி!

நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டா் திருநாளையொட்டி செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்த... மேலும் பார்க்க

ஈஸ்டா் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபா் குற்றச்சாட்டு!

ஈஸ்டா் திருநாளையொட்டி தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சா் வாகனம் மீது தாக்குதல்!

பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சா் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலா் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலுக்கு... மேலும் பார்க்க