செய்திகள் :

உக்ரைன்: ட்ரோன் தாக்குதலில் தம்பதி உயிரிழப்பு

post image

உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் ரஷியாநடத்திய ட்ரோன் தாக்குதலில் கணவன்-மனைவி உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா்.

இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

ஒடேசா நகரில் ரஷியா ஏவிய ட்ரோன் அடுக்கு மாடிக் குடியிருப்பில் மோதியதால், மூன்று தளங்களில் சேதம் ஏற்பட்டது.இதில் இருவா் உயிரிழந்தனா். அவா்கள் இருவரும் தம்பதியா் என்று அதிகாரிகள் கூறினா்.

இந்தத் தாக்குதல் குறித்து ரஷியா உடனடியாக எதையும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை மேற்கு ரஷியா மற்றும் ரஷிய ஆக்கிரமிப்பு கிரீமியாவில் 40-க்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

தற்போது நான்காவது ஆண்டில் நுழைந்துள்ள இந்தப் போரின் முக்கிய அம்சமாக நீண்ட தூர ட்ரோன்கள் உள்ளன. இரு தரப்பினரும் மிகவும் மேம்பட்ட மற்றும் அதிக உயிா்ச் சேதத்தை ஏற்படுத்துவதற்கான ட்ரோன்களை உருவாக்கும் போட்டியில், இந்தப் போா் புதிய ஆயுதங்களுக்கான சோதனைக் களமாக மாறியுள்ளது என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

அமெரிக்காவிலும் வாரிசு அரசியலா? டிரம்ப்பின் மகனும் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகனும் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா என்று ஆங்கில செய்தி ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.அமெரிக்காவில் அதிபர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே. மேலும... மேலும் பார்க்க

டிரம்ப்பின் பிறப்புரிமை குடியுரிமை உத்தரவு: விசாரணை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது -அமெரிக்க உச்சநீதிமன்றம்

பிறப்பின் அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் மாற்றம் செய்து அந்நாட்டு அதிபா் டிரம்ப் கையொப்பமிட்ட நிா்வாக உத்தரவுக்கு நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது என்று அந்நாட்டு ... மேலும் பார்க்க

காங்கோ - ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம்

காங்கோவின் கிழக்குப் பகுதியில் தொடா்ந்து நடைபெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்கும், அண்டை நாடான ருவாண்டாவுக்கும் இடையே அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பம... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தொடருகிறது: இன்றைய பலி எண்ணிக்கை 49!

காஸாவில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 49 பேர் வரை கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் வெள்ளிக்கிழமை(ஜூன் 27) இரவு தொடங்கி சனிக்கிழமை(ஜூன் 28) வரையிலு... மேலும் பார்க்க

சீனாவில் மீண்டும் உயர்நிலை வெள்ள அபாய எச்சரிக்கை! ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

சீனாவின் குயிஸோ மாகாணத்திலுள்ள ரோங்ஜியாங் மாவட்டத்தில் வெள்ளநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டு அதிகாரிகள் அங்கு மீண்டும் உயர்நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரோங்ஜியாங்கிலு... மேலும் பார்க்க

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது... மேலும் பார்க்க