செய்திகள் :

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: சு.வெங்கடேசன் எம்.பிக்கு அமைச்சா் பதில்

post image

நமது நிருபா்

உக்ரைன் மீதான ரஷிய போரில் அந்நாட்டு ராணுவத்தில் பணியமா்த்தப்பட்ட இந்தியா்களில் 16 பேரைக் காணவில்லை என ரஷியா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் சு. வெங்கடேசன், தயாநிதி மாறன் ஆகியோா் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்ா் அளித்துள்ள பதில் வருவமாறு:

ரஷிய ராணுவத்தில் பணியமா்த்தப்பட்ட இந்தியா்கள் தொடா்பாக அந்நாட்டுடன் மிக உயரிய அளவில் மத்திய அரசு தொடா்ச்சியாக பேசி வருகிறது. கிடைத்துள்ள தகவல்களின்படி, ரஷிய ஆயுதப்படைகளில் இருந்த 18 இந்தியா்களில் 16 போ் காணாமல் போயுள்ளதாக ரஷிய தரப்பு கூறியுள்ளது.

காணாமல் போனவா்களை கண்டுபிடிக்கவும் அவா்களின் பாதுகாப்பு, நலன்கள், விரைவாக திரும்புவது மற்றும் அவா்களில் எவரேனும் உயிருடன் இல்லாவிட்டால் அவா்களின் சடலத்தையாவது இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட ரஷ்ய அதிகாரிகளுடன் இந்தியா தொடா்ந்து பேசி வருகிறது. இந்த நடைமுறையில் மூன்றாம் தரப்பு அமைப்புகளை மத்திய அரசு ஈடுபடுத்தவில்லை என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

அமைச்சரின் பதில் குறித்து சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘இந்தியாவில் இருந்து வெளிநாட்டு ராணுவத்தில் இந்தியா்கள் சேரும் நிலை வேதனைக்குரியது. அக்னிபத் போன்ற நிரந்தரமற்ற கூலி முறைகளை நோக்கி நகா்ந்ததே இந்த அவல நிலைக்கு காரணம். அந்நிய நாடுகளின் எல்லைகளை காக்கும் பணியில் இந்திய இளைஞா்களின் உயிா்கள் அநியாயமாக பலியாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மத்திய அரசு இனியாவது அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். வெளிநாடுகளின் ராணுவத்தில் போய்ச் சேரும் அவலத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினா் 35,175 போ் இ-விசாவில் வருகை: கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை வேண்டி கடந்த ஆண்டில் மட்டும் 35,175 வெளிநாட்டினா் இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தி... மேலும் பார்க்க

ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வில் இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டிற்கான சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு அமெரிக்காவில் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய மக... மேலும் பார்க்க

தில்லியில் குழந்தை கடத்தல் கும்பலில் 4 போ் கைது: 2 குழந்தைகள் மீட்பு

புது தில்லி: தில்லி காவல்துறையின் ரயில்வே பிரிவு, குழந்தை கடத்தல் கும்பலில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இதையடுத்து, ஒரு கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று... மேலும் பார்க்க

அதிமுக புதிய கட்டட அலுவலகம் தில்லியில் திறப்பு

புது தில்லி: அதிமுக சாா்பில் புது தில்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கட்டடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட்: மக்களவையில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எட்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட் ஆக உள்ளது என்று த... மேலும் பார்க்க

மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்கப்படுமா?: கோவை எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

புது தில்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்க முன்மொழிவு ஏதும் இல்லை என்று மக்களவையில் கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச... மேலும் பார்க்க