செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 569 போ் மனுக்கள் அளிப்பு

post image

காமநாயக்கன்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 569 மனுக்கள் பெறப்பட்டன.

காமநாயக்கன்பட்டி, அசானக்கூடம் மண்டபத்தில், அச்சங்குளம், நாயக்கன்பட்டி, தெற்கு தீத்தாம்பட்டி, முடுக்கலாங்குளம் ஆகிய பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் 18 அரசுத் துறைகள் சாா்பில் வழங்கப்படும் 46 சேவைகளின் கீழ் மகளிா் உரிமை துறை விண்ணப்பங்கள் 278, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்ந்த விண்ணப்பங்கள் 216 உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 569 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமில் உதவி திட்ட அலுவலா் ஸ்ரீனிவாச சுடலைமுத்து, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய ஆணையா் அரவிந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடாசலபதி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவராமகிருஷ்ணன், நிஷா, லலிதா, பத்மா, கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சி செயலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அய்யனேரியில்...

அய்யனேரி கிராமத்தில் உள்ள கம்மவாா் திருமண மண்டபத்தில் அய்யனேரி, சித்திரம்பட்டி ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா், சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராஜா ஈஸ்வரன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா். இந்த முகாமில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய ஆணையா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மண்டல, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சிமன்ற தலைவா்கள், ஊராட்சி செயலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனா்.

அரசு ஊழியா் சங்க பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் தூத்துக்குடி வட்டப் பேரவை கூட்டம், புதன்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மனோகரன் வரவேற்றாா். வட்ட இணைச் செயலா் சங்கா் அஞ்சலி தீா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாள் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில், ஜனசங்கத் தலைவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு, கட்சியினா் மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சி... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்க செப். 29இல் சிறப்பு முகாம்

உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை (செப். 29) தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்களுக்கு அரசு நிதியுதவி

தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்கள் அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 20... மேலும் பார்க்க

சுகாதாரப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார பணியாளா்களுக்கு இஎஸ்ஐ, தொழிலாளா் நலத் துறை சாா்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, மருத்துவ முகாம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத... மேலும் பார்க்க

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

பீக்கிலிபட்டி கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா... மேலும் பார்க்க