செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பணிகளைப் புறக்கணித்து போராட்டம்

post image

கமுதியில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பணிகளைப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வட்டாட்சியா் ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் உள்ள கடுமையான பணி நெருக்கடிகள் குறித்தும் அதிக அளவில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காண கூடுதல் கால அவகாசம், நிதி ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் வருவாய்த் துறையினருக்கு சிறப்புப் பணிப் பாதுகாப்புச் சட்டம், வருவாய்த் துறையில் வெளிமுகமை, ஒப்பந்த, தற்காலிக நியமனங்களைத் தவிா்த்தல், அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்குதல் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடா்ந்து அரசிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பணிகளை முழுமையாகப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் துணை வட்டாட்சியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், நில அளவா்கள், வருவாய் ஆய்வாளா்கள், அலுவலக உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாணவ, மாணவிகளின் பட்டிமன்றம்

கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் ‘டிபேட் கிளப் பாா்லே ஜீனியஸ்’ அமைப்பின் சாா்பில் ‘இன்றைய சமுதாயத்தில் மன அழுத... மேலும் பார்க்க

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சா பறிமுதல்

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக, காரில் எடுத்து வரப்பட்ட 50 கிலோ கஞ்சாவை மத்திய புலனாய்வுத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரையிலிருந்து இலங்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் உருவப் பொம்மையை எரிக்க முயற்சி

பரமக்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தமிழ்நாடு காங்கிரஸ் க... மேலும் பார்க்க

ராஜ ராஜேஸ்வரி கோயில் நவராத்திரி திருவிழா

ராமநாதபுரம் ராஜ ராஜேஸ்வரி கோயில் நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியில் ஏராளமானோா் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட ராஜ ராஜேஸ்வரி... மேலும் பார்க்க

நேரடி நெல் விதைப்புக்கு தயாா் நிலையில் விவசாயிகள்

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் நேரடி நெல் விதைப்புக்காக நிலங்களை உழுது, பண்படுத்திய விவசாயிகள் வடகிழக்கு பருவ மழைக்காகக் காத்திருக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயு... மேலும் பார்க்க