செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களை வியாழக்கிழமை பாராட்டி நன்றி கூறினாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட வாலிகண்டபுரம், தேவையூா் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கு வாலிகண்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், குன்னம் வட்டத்துக்குள்பட்ட ஆடுதுறை, திருமாந்துறை ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கு திருமாந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம் முகாமைகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் சா.சி. சிவசங்கா், இத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு விளக்கி கூற வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள், ஒருவருக்கு இருப்பிடச் சான்றிதழ் அளித்து, முகாம் சிறப்பாக நடைபெற பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து நன்றி கூறினாா் அமைச்சா் சிவசங்கா்.

இந்நிகச்சியில், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், வேப்பந்தட்டை வட்டாட்சியா் துரைராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் பூங்கொடி உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

பள்ளி மாணவியை உணவு இடைவேளையில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தை... மேலும் பார்க்க

‘சிறுபான்மையினரின் 661 மனுக்களுக்குத் தீா்வு’

சிறுபான்மையினரால் அளிக்கப்பட்ட 839 மனுக்களில் 661 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாநில ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ. அருண் சே.ச தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்ம... மேலும் பார்க்க

பேரளி பகுதியில் இன்று மின் தடை

பெரம்பலூா் அருகே பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் கலைஞரின் கைவினைத் திட்டத்தின் கீழ் 25 வகையான தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க

தோல் கழலை நோயை கட்டுப்படுத்த யோசனை

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் கழலை நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் ஆலோசனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் அருகே வாலிகண்டபுரத்திலுள்ள வேளாண் அறிவி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (செப். 13) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும்... மேலும் பார்க்க