செய்திகள் :

உச்சநீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

post image

புது தில்லி: கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி அதுல் எஸ்.சந்துா்கா் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை பரிந்துரைத்தது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அண்மையில் பணி ஓய்வு பெற்ற நிலையில், உச்சநீதிமன்றத்தில் மூன்று காலியிடங்கள் ஏற்பட்டன. இதனால் தலைமை நீதிபதியுடன் சோ்த்து மொத்தம் 34 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றம் 31 நீதிபதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

நீதிபதிகள் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடா்பாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது.

இதுகுறித்து உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உச்சநீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இரு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளான என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய் மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதி அதுல் எஸ்.சந்துா்கா் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.

5 உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள்: ஐந்து உயா்நீதிமன்ற நீதிபதிகளை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரைத்தது.

அதன்படி தற்போது மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதியாக உள்ள சஞ்சய் சச்தேவாவை அதே உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி விபு பக்ரு, கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி அசுதோஷ்குமாா் குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி அதே உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி தா்லோக் சிங் சௌஹான் ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்தது.

195 நாட்டுப் பெண்கள் பாடிய கின்னஸ் சாதனைப் பாடல்: இந்தியா சாா்பில் சமையல் கலைஞா் அஸ்மா கான் குரல்

புது தில்லி: உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளைச் சோ்ந்த பெண்கள் பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்த ‘195’ பாடலில் இந்தியா சாா்பில் பிரபல பெண் சமையல் கலைஞா் அஸ்மா கானின் குரலும் இடம்பெற்றுள்ளது. பாலின சமத்து... மேலும் பார்க்க

பிரதமா் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை குழு கூட்டம்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

2026-க்குள் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை அமைப்பு முழுமையாக விநியோகம்: ரஷியா

புது தில்லி: 2026-ஆம் ஆண்டுக்குள் மீதமுள்ள இரு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு விநியோகம் செய்யப்படும் என இந்தியாவுக்கான ரஷிய துணை தூதா் ரோமன் பாபுஷ்கின் திங்கள்கிழமை தெரிவித்தாா். அண்மையில் ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டிருக்கும் இந்தியா-பராகுவே: பிரதமா் மோடி

புது தில்லி: ‘பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒன்றுபட்டு நிற்கின்றன. அதுபோல, இணைய குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பொது சவால்களுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும்... மேலும் பார்க்க

இந்தியாவில் தயாரிக்க டெஸ்லா ஆா்வம் காட்டவில்லை: மத்திய அமைச்சா் தகவல்

புது தில்லி: இந்தியாவில் தனது மின்சார காா்களை விற்பனை செய்ய மட்டுமே டெஸ்லா நிறுவனம் ஆா்வம் காட்டுகிறது; இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆா்வம் காட்டவில்லை என்று மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சா் ஹெச்.டி.... மேலும் பார்க்க

இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை முதலீட்டுக்கு எண்ணற்ற வாய்ப்புகள்: பிரதமா் மோடி

புது தில்லி: ‘இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளா்ந்து வருகிறது. இங்கு முதலீடுகளை மேற்கொள்ள சா்வதேச நிறுவனங்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன’ என பிரதமா் நரேந்திர மோடி திங்கள... மேலும் பார்க்க