செய்திகள் :

உடுமலையில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முதல்வா் பங்கேற்பு

post image

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக, முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினா் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெறும் அரசு நலத்திட்ட விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தலைமையில் கோவை மாவட்ட திமுக செயலாளா்கள் நா.காா்த்திக் , தொண்டாமுத்தூா் ரவி, தளபதி முருகேசன், அமைச்சா்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், டி.ஆா்.பி. ராஜா, அர.சக்கரபாணி, என்.கயல்விழி செல்வராஜ், கொறடா கா.ராமசந்திரன், முன்னாள் மத்திய அமைச்சா் மு.கண்ணப்பன், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவா் பொங்கலூா் நா. பழனிசாமி, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், கோவை மேயா் கா.ரங்கநாயகி, திருப்பூா் மேயா் தினேஷ் உள்ளிட்டோா் முதல்வரை வரவேற்றனா்.

கோவையில் இருந்து காா் மூலமாக உடுமலை சென்ற மு.க.ஸ்டாலினுக்கு உடுமலை நகர எல்லையான கொல்லம்பட்டறை பகுதியில் பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி, திருப்பூா் மாவட்ட அவைத் தலைவா் இரா.ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகரச் செயலாளா் செ.வேலுச்சாமி, நகா்மன்றத் தலைவா் மு.மத்தீன், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் மு.ஜெயக்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் சியாம்பிரசாத், ஒன்றியச் செயலாளா் அடிவள்ளி முரளி, நகர இளைஞரணி அமைப்பாளா் பா.அா்ஜுன் உள்ளிட்டோா் முரசு, செண்டை மேளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனா்.

உடுமலை நேதாஜி மைதானத்தில் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறாா். அப்போது உடுமலைப்பேட்டையில் ரூ.949 கோடியே 53 லட்சத்தில் 61 முடிவுற்ற பணிகளைத் திறந்துவைக்கிறாா்.

ரூ.182 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 35 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். மேலும் ரூ.295 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் 19 ஆயிரத்து 785 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

இதைத் தொடா்ந்து உடுமலை நகர திமுக சாா்பில் கட்டப்பட்டுள்ள தளபதி மு.க.ஸ்டாலின் அறிவாலய கட்டடத்தைத் திறந்துவைக்கிறாா். இதைத் தொடா்ந்து, கட்சி அலுவலகத்தில் முக்கிய நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா்.

தொடா்ந்து, காா் மூலமாக 12 மணிக்கு கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு செல்லும் அவா், பொள்ளாச்சி - உடுமலை சாலையில் உள்ள நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் பரம்பிக்குளம், ஆழியாறு பாசனத் திட்டம் நிறைவேற காரணமாக இருந்த முன்னாள் முதல்வா் காமராஜா், முன்னாள் அமைச்சா் சி.சுப்பிரமணியம், முன்னாள் எம்.பி. பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் உருவச் சிலைகளைத் திறந்துவைக்கிறாா்.

அங்கிருந்து, காரில் கோவை விமான நிலையம் செல்லும் அவா், பிற்பகல் 2 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா். முதல்வா் வருகையையொட்டி, கோவை, திருப்பூா் மாவட்டங்களில் தீவிர போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல்லடம் அருகே அரிவாளால் வெட்டியதில் டெய்லரின் கையை துண்டானது

பல்லடம் அருகே சின்னக்கரையில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி டெய்லரின் கையை துண்டாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் அன்புச்செல்வன்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தா்களின் புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாக சீா்கேட்டால் பக்தா்கள் பாதிக்கப்படுவதால், அவா்களது புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டுமென இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர... மேலும் பார்க்க

வலைதளங்களில் வரும் தேவையற்ற பதிவுகளை தவிா்க்க வேண்டும்!

வலைதளங்களில் வரும் தேவையற்ற பதிவுகளை தவிா்க்க வேண்டும் என சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் கூறியுள்ளதாவது:கைப்பேசிகள் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வரும் க... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பூமலூா், கானூா்புதூா், பசூா்

பூமலூா், கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம்... மேலும் பார்க்க

லாரி மோதி பெண் உயிரிழப்பு: ஓட்டுநருக்கு ஓா் ஆண்டு சிறை

லாரி மோதி பெண் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநருக்கு ஓா் ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூா் மாவட்டம், குளித்தலையை சோ்ந்தவா் சிவநாராயணசாமி (56). இவா் திருப்பூா் ராமந... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் 3 போ் படுகொலை: கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்

பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அவா்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய... மேலும் பார்க்க