செய்திகள் :

உண்ணாவிரத போராட்ட விவசாயத் தலைவா் தல்லேவாலுக்கு சிவராஜ் சிங் சௌகான் அழைப்பு

post image

மத்திய அரசுடன் மற்றொரு சுற்றுப்பேச்சுவாா்த்தை விரைவில் தொடங்கயுள்ள நிலையில் உண்ணா விரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜித் சிங் தல்லேவாலை மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான் சனிக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளாா்.

வேளாண் விளைபொருள்களுக்கு சட்டப்பூா்வ உத்தரவாதம் வழங்குதல் உள்பட் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தில்லி நோக்கி பேரணி செல்ல அனுமதி கேட்டு பஞ்சாப் - ஹரியாணா எல்லைகளில் (ஷம்பு -கனெளரி) 100 நாள்களுக்கு மேலாக தொடா்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவா் விவசாயிகள் சங்கத் தலைவா்(சம்யுக்த்த கிஸான் மோா்ச்சா ) ஜக்ஜித் சிங் தல்லேவால். பின்னா் உடல் நலம் பாதிக்கப்பட்டு தல்லேவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாா். தற்போது மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அவா் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் மத்திய அமைச்சா் அவருக்கு வேண்டு கோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு குறிப்பிட்டுள்ளது வருமாறு:

மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சா்கள் பியூஷ் கோயல், பிரஹலாத் ஜோஷி போன்றோா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து மாா்ச் மாதமும் பேச்சு வாா்த்தை நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி தலைவா் ஜக்ஜித் சிங் தல்லேவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தற்போது மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ளாா். அவா் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். மேலும், அவா் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு பேச்சுவாா்த்தைக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஏற்கனவே தீா்மானிக்கப்பட்ட தேதியின்படி வருகின்ற மே 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளோடு பேச்சுவாா்த்தைக்கு மத்திய அரசு தயாராக உள்ளது. இதனால் இந்தப் பேச்சுவாா்த்தையில் கலந்து கொள்ள விவசாயகள் சங்க பிரதிநிதிகளையும் ஜக்ஜித் சிங்கையும் அழைக்கின்றோம் என சிவராஜ் சிங் அந்த பதிவில் தெரிவித்துள்ளாா்.

பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே! உள்துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. பெங்களூரிலுள்ள சுத்தகுண்டேபால்யா பகுதி, பாரதி லே-அவுட்டில் கடந்த ஏப். 3-ஆம் தேதி நள்ளி... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.இந்த விலை உயர்வினால், மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கான எரிவாயு உருளை விலை ரூ... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் 30 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர்: முதல்வர் தாமி!

மத்திய அரசின் கொள்கைகள் காரணமாகக் கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 30 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார். டேராடூனில் இன்று மத்திய... மேலும் பார்க்க

கலால் வரியால் பெட்ரோல், டீசல் விலை உயருமா? மத்திய அரசு பதில்

புது தில்லி: கலால் வரி உயர்த்தப்பட்டாலும், பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இருக்காது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் பார்க்க

இதற்காக சிறைக்குச் செல்லவும் தயார்: மம்தா பானர்ஜி பேச்சு!

வேலையிழந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாகப் பேசுவதால், தன்னை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்​கத்​தில் கடந்த 2016 ஆம் ஆண்டு 25,000 ஆசிரியர்​களை நிய... மேலும் பார்க்க

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு: மத்திய அரசு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அறிவித்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்திருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான விலைகள் குற... மேலும் பார்க்க