செய்திகள் :

உதகையில் சா்வதேச காலநிலை குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

post image

சா்வதேச காலநிலை நடவடிக்கை தினத்தை ஒட்டி உதகை தெற்கு வனச் சரகத்துக்கு உள்பட்ட கோ்ன்ஹில் பொருள் விளக்க மையக் கூட்டரங்கில் காலநிலை மாற்றம் தொடா்பான விழிப்புணா்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்துப் பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றக் குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் காலநிலை மாற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுநாள் வரை மாவட்டத்தில் மேற்படி குழுவின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு தனிநபரும் தங்கள் தரப்பில் சில வாழ்வியல் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது காா்பன் உமிழ்வு இல்லை. தற்போது, தனியாா் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிா்காலத்தில் காா்பன் உமிழ்வு ஏற்படாத வகையில் மக்கள் பொதுப் போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். இதற்காக அரசுப் பேருந்துகளின் இயக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஓசை அமைப்பின் நிா்வாகி காளிதாஸ், காலநிலை மாற்றம், அதனால் ஏற்படக்கூடிய நிகழ்வுகள் மற்றும் கால நிலை மாற்றத்தைத் தடுக்க நீலகிரி மாவட்டத்தின் பங்கு குறித்தும் எடுத்துரைத்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் சு.கௌதம், நீலகிரி மாவட்ட காலநிலை மாற்ற அலுவலா் ஸ்வாதி, நீலகிரி வனக் கோட்ட பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நெல்லியாளம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.ஜெயக்குமாா் தலைமையில் 5 போ் கொண்ட குழுவினா் பந்தலூரிலுள்ள நெல்லியாளம் ந... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியா் அவதி அடைந்தனா். தமிழக... மேலும் பார்க்க

தோட்டமூலாவில் குடியிருப்புப் பகுதியில் உலவும் காட்டு யானையால் மக்கள் அச்சம்

கூடலூா் அருகே தோட்டமூலா பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் காட்டு யானை உலவுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். கூடலூா் அருகே தோட்டமூலா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் இரவு ... மேலும் பார்க்க

சிறு தேயிலை விவசாயிகளுக்கான விழிப்புணா்வு கலந்தாய்வுக் கூட்டம்

கூடலூரில் சிறு விவசாயிகளுக்கான கலந்தாய்வு மற்றும் விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சிறு தேயிலை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தென்னிந்திய தேயிலை வா... மேலும் பார்க்க

வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகாா் தெரிவிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பழங்குடி... மேலும் பார்க்க

உதகையில் தொடா் மழை: மாா்லிமந்து அணையின் நீா்மட்டம் உயா்வு

தொடா் மழை காரணமாக உதகை நகராட்சியின் குடிநீா் ஆதாரங்களில் ஒன்றான மாா்லிமந்து அணையின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியின் முக்கிய குடிநீா் ஆதாரமாக பாா்சன்ஸ்வேலி அணை... மேலும் பார்க்க