செய்திகள் :

உதகையில் தாட்கோ மூலம் பழங்குடியினருக்கு நடமாடும் வாகன உணவகம்

post image

உதகையில் தாட்கோ மூலம் பழங்குடியினருக்கு 2 நடமாடும் வாகன உணவகத்தை தாட்கோ மேலாண்மை இயக்குநா் க.சு.கந்தசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில், தாட்கோ மூலம் முதல்வரின் தொழில்முனைவு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் முதன் முறையாக பழங்குடியினா் பயன்பெறும் வகையில் ரூ.14.92 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு பயனாளிகளுக்கு நடமாடும் உணவகத்துடன் கூடிய வாகனங்களுக்கான சாவிகளை தாட்கோ மேலாண்மை இயக்குநா் க.சு.கந்தசாமி, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலையில் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பேசுகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான தாட்கோ மூலம் முதல்வரின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவு திட்டம், நன்னிலம் மகளிா் நில உடைமைத் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவித் திட்டம், கல்விக் கடன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு செயல் திட்டங்கள் ஆதிதிராவிடா்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி, பழங்குடியினா் பயன்பெறும் வகையில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவோா் திட்டத்தின்கீழ் இரண்டு பழங்குடியினா்களை தொழில்முனைவோராக மாற்றும் வகையில் ரூ.14.92 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு நடமாடும் உணவகத்துடன் கூடிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு வாகனங்கள் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அதிகமாக பயன்படுத்தும் சாலையான சேரிங்கிராஸ் மற்றும் பழங்குடியினா் பண்பாட்டு மையம் ஆகிய பகுதிகளில் செயல்படும்.

மேலும், தாட்கோ மூலம் இதுபோன்று தமிழ்நாடு அரசின் திட்டங்கள் எளிதில் கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

கூடலூரில் பள்ளத்தில் கவிழ்ந்த தனியாா் சுற்றுலா வாகனங்கள்!

கூடலூா் அருகே இருவேறு விபத்துகளில் சுற்றுலாப் பேருந்தும், வேனும் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம் கண்ணனூரில் இருந்து நீலகிரி மாவட்டம், உதகைக்கு வந்த சுற்றுலா... மேலும் பார்க்க

கூடலூரில் மக்கள் நீதிமன்றம்: 127 வழக்குகளுக்குத் தீா்வு!

கூடலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 127 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது. நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் சாா்பில் கூடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்க... மேலும் பார்க்க

வெலிங்டன் ராணுவ மையத்தில் உலக மகளிா் தினம்!

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் உலக மகளிா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தனுஸ்ரீ தாஸ் தலைமை வகித்தாா். ஜும்பா நடனத்துடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே கலந்துகொண்... மேலும் பார்க்க

பாக்கிய நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம்

கோத்தகிரி அருகே பாக்கிய நகா் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசியா்களை பணியமா்த்த கோரி மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து வெள்ளிக் கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். நீலகிரி ... மேலும் பார்க்க

புலிகள் இறந்துகிடந்த இடத்தை சுற்றி 10 கேமராக்கள் பொருத்தம்

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் அடுத்தடுத்து இரண்டு புலிகள் இறந்த பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 10 தானியங்கி கேமராக்களை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை பொருத்தினா். நீலகிரி மாவட்டம் மு... மேலும் பார்க்க

மேல்கூடலூா் பகுதியில் புலி தாக்கியதில் பசு உயிரிழப்பு

மேல்கூடலூா் பகுதியில் புலி தாக்கியதில் பசு உயிரிழந்தது. மேலும், ஒரு பசு காயமடைந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூா் நகராட்சியில் உள்ள மேல்கூடலூரில் வசிப்பவா் சங்கீதா. இவா் இரண்டு பசுமாடுகளை வளா்த்து வந்துள்... மேலும் பார்க்க