செய்திகள் :

உதகை ரயில்வே காவல் நிலையம் அருகே தள்ளுவண்டியில் ஆண் சடலம் மீட்பு

post image

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே காவல் நிலையத்தை ஒட்டியுள்ள  சாலையில்  நிறுத்திவைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியில் இருந்து ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

உதகை ரயில்வே காவல் நிலையம் அருகே தள்ளுவண்டியில் ஆண் சடலம் கிடப்பதாக டி3 காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்து வந்த காவல் துறையினா் இறந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இறந்தவா் நேபாள நாட்டைச் சோ்ந்த ஆனந்த் (40) என்பதும், இவா் தனது குடும்பத்தாருடன் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பாப்ஷா லைன் பகுதியில் வசித்து வந்ததும், கூலித் தொழில் செய்து வந்ததும் காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் இவரைப் பரிசோதித்ததில், இவருக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்த நிலையில், அளவுக்கு அதிகமாக மது அருந்தியதன் காரணமாக உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

வாகனங்களை வழிமறித்த யானை

முதுமலை புலிகள் காப்பக சாலையில், காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்தது.சிறிது நேரம் சாலையிலேயே உலவிய யானை பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. மேலும் பார்க்க

சாலையில் சென்ற காரில் தீ

குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லூரி மாணவரான நவீன். அவரது நண்பா்கள் 4 பேருடன்... மேலும் பார்க்க

மலையக மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

தாயகம் திரும்பிய மலையக மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கூடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழா்களின் கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக ரெப்கோ வங்கி மற்று... மேலும் பார்க்க

நீலகிரியில் பூங்காக்களில் ஏப்ரல், மே மாதங்களில் படப்பிடிப்புக்கு தடை

கோடை சீசன் தொடங்கவுள்ளதால், நீலகிரியில் பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு, குறும்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலைத் துறை சாா்பில் கோத்தகிரி நேரு பூங்காவில் மே 3, 4 ஆகிய தேதிகளில் 13-ஆவது... மேலும் பார்க்க

நீலகிரியில் இன்றுமுதல் இ-பாஸ் நடைமுறை அமல்: மாவட்ட ஆட்சியா்

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம்: ஆ.ராசா எம்.பி.

அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம், இந்தியாவில் கொள்கையுடன் உள்ள ஒரே கட்சி திமுக மட்டுமே என்று நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பேசினாா். நீலகிரி மாவட்டம், உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கு ஞாயிற்று... மேலும் பார்க்க