செய்திகள் :

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்கள்!

post image

உத்தரகண்ட்டில் ஏற்பட்டுள்ள பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்களில் 16 பேர் மீட்கப்பட்டனர்.

உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலுள்ள மனா என்கிற உயரமான எல்லைக் கிராமத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்தப் பனிச்சரிவில் எல்லைப்புறச் சாலைகள் அமைப்பைச் சேர்ந்த 57 தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 16 பேர் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 41 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.

பத்ரிநாத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மானா கிராமம் 3,200 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இது இந்திய - திபெத் எல்லையில் உள்ள கடைசி கிராமமாகும்.

மானா கிராமம் முதல் மானா பாஸ் பகுதி வரையிலான 50 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப்புறச் சாலைகள் அமைப்பில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக 57 பேரும் பணியாற்றி வந்தனர்.

இதையும் படிக்க | ஜம்முவில் கனமழை: பாறை உருண்டதில் தாய், மகன் பலி!

பனிப்பொழிவும் மழையும் தொடர்ந்து பெய்து வரும் மோசமான நிலையிலும் பனிச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றனர்.

தொழிலாளர்கள் மீடப்படுவது குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேசுகையில், “இதுவரை 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்தோ-திபெத் எல்லைக் காவல்துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்தவர்களின் உதவியில் மீட்புப் பணி நடைபெற்று வருகின்றது. பேரிடர் மேலாண்மைத் துறை உள்பட மொத்த நிர்வாகமும் விழிப்புடன் இருக்கின்றனர். சிக்கியுள்ள நபர்களை விரைவில் பாதுகாப்பாக மீட்க முயற்சித்து வருகிறோம்” என்றார்.

மோசமான வானிலை குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.

சண்டிகரில் உள்ள பாதுகாப்புத் துறையின் புவி தகவல் ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (பிப். 27) விடுத்த எச்சரிக்கையில் சாமோலி, உத்தர்காசி, ருத்ரபிரயாக், பித்தோராகர், பாகேஷ்வர் ஆகிய மாவட்டங்களில் 2,400 மீட்டருக்கு மேல் உயரமான இடங்களில் 24 மணி நேரத்திற்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

இந்தியாவின் மொத்த நாட்டு உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.கடந்த நிதியாண்டின் (2024 -25) இரண்டாவது காலாண்டில் 5.6 சதவிகிதமாக இருந்த மொத்த உள்... மேலும் பார்க்க

உ.பி.: சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

உ.பி.யின் ஜான்பூரில் சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் நகர் கோட்வாலி பகுதியில் வாய்க்காலில் வீசப்பட்ட சிவப்பு நிற சூட்கேஸ்... மேலும் பார்க்க

ஐடி ஊழியர் தற்கொலை: நேரலையில் மனைவி மீது குற்றச்சாட்டு!

மனைவி ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி நேரலையில் பதிவு செய்து ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். உ.பி. மாநிலத்தின் ஆக்ராவில் உள்ள டிஃபன்ஸ் காலனியில் வசிப்பவர் மானவ்... மேலும் பார்க்க

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? கட்சிக்குள் தொடரும் குழப்பம்!

பாஜகவின் தேசியத் தலைவரை நியமிக்கும் பணியில் மேலும் தொய்வு ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.பாஜகவின் தற்போதைய தேசியத் தலைவராக ஜெ.பி. நட்டா பதவி வகிக்கிறார். இவர் 2019 ஆம் ஆண்டில் பாஜகவின்... மேலும் பார்க்க

கோவா வரும் சுற்றுலா பயணிகள் குறைந்ததற்கு இட்லி, சாம்பார் தான் காரணம்!

நமது நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கைக் குறைந்ததற்கு இட்லி, சாம்பார், வடா பாவ் மற்றும் உக்ரைன் போர்தான் காரணம் என்று பாஜக எம்எல்ஏ கூறியிருக்கிறார். மேலும் பார்க்க

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் சூப்பாக்கிச் சூடு; யாருக்கும் காயம் இல்லை

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மைதேயி மத வழிபாட்டு தலம் அருகிலுள்ள மலைகளில் இருந்து கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மைதேயின் புனிதத் தலமான கோங்பா மருவுக்கு பக... மேலும் பார்க்க