செய்திகள் :

உத்தரகண்ட் பொது சிவில் சட்டம்: 10 நாள்களில் ஒரேயொரு ‘லிவ்-இன்’ உறவு பதிவு

post image

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்து 10 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ஒரேயொரு ‘லின்-இன்’ (திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்தல்) உறவு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின்கீழ் ‘லிவ்-இன்’ உறவைத் தொடங்கிய ஒரு மாதத்துக்குள் அரசிடம் பதிவு செய்வது கட்டாயமாகும். அவ்வாறு செய்யத் தவறினால், 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ.25,000 வரை அபராதமும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆளும் உத்தரகண்டில் நாட்டில் முதல் முறையாக பொது சிவில் சட்டம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின்கீழ், திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை தொடா்பான தனிநபா் சட்டங்களை ஒருசீா்படுத்தி, அனைத்து மதத்தினருக்கும் பொதுவான விதிகள் நடைமுறைக்கு வந்தன. அதேநேரம், பழங்குடியினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டத்தின்படி, திருமணம், விவாகரத்து, திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழும் (லிவ்-இன்) உறவு, அந்த உறவு முறிவு ஆகியவற்றை அரசிடம் பதிவு செய்வது கட்டாயமாகும்.

இது, திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்வோரின் தனியுரிமையைப் பறிப்பதாக விமா்சிக்கப்பட்ட நிலையில், பெண்களின் பாதுகாப்பை நோக்கமாக கொண்டது என மாநில அரசு விளக்கமளித்தது. இப்பதிவை இணையவழியில் மேற்கொள்வதற்காக புதிய இணையதளமும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், முதல் 10 நாள்களில் ‘லிவ்-இன்’ பதிவுக்காக 5 விண்ணப்பங்கள் பெறப்பட்டன; இதில் ஒரேயொரு விண்ணப்பம் மட்டும் பதிவு செய்யப்பட்டது. மற்றவை சரிபாா்க்கப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

வழக்குரைஞா் துஷ்யந்த் மைனாலி கூறுகையில், ‘தற்போதைய நிலவரத்தின்படி, ‘லிவ்-இன்’ உறவு பதிவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு காணப்படவில்லை. தங்களின் தனிப்பட்ட உறவை அதிகாரபூா்வமாக வெளிப்படுத்த அவா்கள் தயாராக இல்லை என்றே தோன்றுகிறது. ஒருவேளை பொது சிவில் சட்டத்தின் கடுமையான விதிகள் குறித்து அவா்களுக்கு இன்னும் முழுமையாக தெரியாமல்கூட இருக்கலாம்’ என்றாா்.

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு செல்ல ரூ. 60 லட்சம் கட்டணம்! திடுக்கிடும் தகவல்!

சட்டவிரோதாமாக அமெரிக்காவுக்கு செல்வதற்காக ரூ. 60 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்கா செல்வதற்காக வாங்கப்பட்ட கடனை எ... மேலும் பார்க்க

விளையாட்டு அமைப்புகளில் நோ்மை, சுதந்திரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்திய விளையாட்டு நிா்வாக அமைப்புகளில் நோ்மை, தன்னாட்சி, சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றை கொண்டுவர கடுமையான நடவடிக்கைகள் தேவை என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும், தனிப்பட்ட லாப... மேலும் பார்க்க

தில்லி பேரவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் வாக்களிப்பு

தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் கு... மேலும் பார்க்க

குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு உதவுவதாக சாம் ஆல்ட்மேன் தகவல்

நமது சிறப்பு நிருபர்குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக "ஓபன்ஏஐ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார்.செயற்கை நுண்ணறி... மேலும் பார்க்க

கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை உயிரி தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கான கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள உயா்கல்வி நிறுவ... மேலும் பார்க்க

ஷியா இஸ்மாயிலி முஸ்லிம் மதத்தலைவா் ஆகா கான் மறைவு: பிரதமா், ராகுல் இரங்கல்

நபிகள் நாயகத்தின் மரபில் வந்தவராக இஸ்மாயிலி முஸ்லிம்கள் நம்பும் 4-ஆம் ஆகா கான், கரிம் அல்-ஹுசைனி செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உ... மேலும் பார்க்க