செய்திகள் :

உத்தரப்பிரதேசம்: "அண்ணனின் சிகிச்சைக்கு பணம் தேவை" - சொந்த வீட்டில் ரூ.30 லட்சம் திருடிய பெண்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மகாவிர்ஜி நகரில் வசித்து வருபவர் மியூஷ் மித்தல். துணி வியாபாரியான மித்தல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பூஜா (32) என்ற பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 15ம் தேதி மித்தல் வீட்டில் இருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவை திருட்டுப் போனது.

இதையடுத்து மித்தல் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது வீட்டில் வந்து திருடியவர்கள் குறித்து தெரியவந்தது.

திருட்டு
திருட்டு

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''மித்தலும், பூஜாவும் சம்பவம் நடந்த அன்று மாலை 3.15 மணிக்கு ஷாப்பிங் சென்றுவிட்டு மாலை 6 மணிக்கு வந்துள்ளனர். அந்த நேரத்தில் திருட்டு நடந்துள்ளது. பூஜாவின் சகோதரர் ரவி மற்றும் ரவியின் மைத்துனர் தீபக் ஆகியோர் பூஜாவும், அவரது கணவரும் வெளியில் சென்ற நேரத்தில் இத்திருட்டில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைக் கைது செய்து விசாரித்தபோது பூஜாதான் இத்திருட்டுக்கு திட்டம் தீட்டிக்கொடுத்தது வந்துள்ளார்.

இதையடுத்து பூஜா, அவரது தாயார் அனிதா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பூஜாவின் சகோதரர் ரவிக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சையளிக்க அதிக பணம் தேவைப்படும் என்பதால் குடும்பமே சேர்ந்து இத்திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. திருடிய அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தனர்.

மும்பை: 1200 அடி பள்ளத்தாக்கில் பிணமாகக் கிடந்த பெங்களூரு பேராசிரியர்; தீவிர விசாரணையில் போலீஸ்

பெங்களூருவில் பேராசிரியராக இருந்தவர் சண்முக பால சுப்ரமணியம் (58). இவர் சிறந்த பேச்சாளர் ஆவார். நாடு முழுவதும் தனியார் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்காக நடத்தும் கருத்தரங்குகளில் பேச்சாளராக இவரை அழ... மேலும் பார்க்க

டெல்லி: இரட்டை கொலையில் முடிந்த திருமணம் மீறிய உறவு; கர்ப்பிணி காதலியைக் குத்திக்கொன்ற இளைஞர்

டெல்லி ராம் நகரில் வசித்து வருபவர் ஆகாஷ். இவரது மனைவி சாலினி ஆட்டோ டிரைவர். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. சாலினிக்கு சைலேந்திரா என்பவருடன் திருமணம் தாண்டிய உறவு இருந்து வந்தது.தற்போது ச... மேலும் பார்க்க

``நான் யாரு தெரியுமா? என் அப்பா கலெக்டர் பி.ஏ!'' - மது போதையில் தகராறு; சம்பவம் செய்த கடலூர் எஸ்.பி

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் இருந்து மதுபான கடத்தலை தடுப்பதற்காக, நேற்று கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போ... மேலும் பார்க்க

Louvre Museum: `விலைமதிப்பற்ற' நெப்போலியன் நகைகள் திருட்டு; உச்ச பாதுகாப்பை தாண்டி எப்படி நடந்தது?

உலகிலேயே மதிப்புமிக்க வரலாற்றுக் கலைப்பொருட்கள் இருக்கும் அருங்காட்சியகம் பாரிஸில் உள்ள லூவர். மோனா லிசா போன்ற அதீத முக்கியத்துவம் கொண்ட பொருட்கள் இங்கு உயர் தொழில்நுட்ப கண்காணிப்பில் உள்ளன. இங்கிருந்... மேலும் பார்க்க

`ஆன்லைனில் மது ஆர்டர்' - ரூ. 7 லட்சத்தை இழந்த சினிமா நிறுவனம்; சைபர் கிரைம் மோசடி

இப்போதெல்லாம் எந்தப் பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதை ஆன்லைனில் வாங்குவது அதிகரித்து இருக்கிறது. ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும் போது, சைபர் கிரிமினல்களால் பலர் தங்களது பணத்தை இழந்து விடுகின்றனர்... மேலும் பார்க்க

சீனா டு தூத்துக்குடி; துறைமுகத்தில் சிக்கிய ரூ.5 கோடி மதிப்பிலான சீன `பைப்' பட்டாசுகள் -விவரம் என்ன?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் கடத்தி விற்கப்படுகிறதா என, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையி... மேலும் பார்க்க