செய்திகள் :

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: தரைப்பாலும் மூழ்கியது!

post image

உத்திரகாவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஒடுக்கத்தூரில் இருந்து நேமந்தபுரம் இடையே செல்லக்கூடிய ஆற்று தரைபாலம் மூழ்கியது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்து வரும் நிலையில், வேலூர் மாவட்டத்திலும் கடந்து சில நாட்களாக பகல் மற்றும் இரவில் அவ்வப்போது விட்டுவிட்டு பெய்து வரும் கனமழையின் காரணமாக ஜவ்வாது மலை தொடரில் உருவாகும் வெள்ளத்தால் ஒடுக்கத்தூர் அடுத்த மேல் அரசம்பட்டில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் உத்தரகாவிரி ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஒடுக்கத்தூரில் இருந்து நேமந்தபுரம் இடையே செல்லக்கூடிய ஆற்றில் உள்ள தரைபாலம் மூழ்கியது.

மேலும், அங்கு கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தின் கட்டுமானம் பணிகளும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கிச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதால் மக்கள் தாழ்வான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாகை: நாளை விஜய் பரப்புரையில் இடம் மாற்றம்!

Flood in the Uttara Cauvery River Even the ground floor was submerged

ஊட்டச்சத்து நிறைந்த குழந்தைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு!: முதல்வர் ஸ்டாலின்

ஊட்டச்சத்து நிறைந்த குழந்தைகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை இன்று (செப்.19) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அள... மேலும் பார்க்க

சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரம்!

தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசு உற்பத்திக்கு பெயர் பெற்ற விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. பட்டாசு தொழிற்சாலைகளில் புதிய வடிவமைப்புகளுடன... மேலும் பார்க்க

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண்க!: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்... மேலும் பார்க்க

ஆப்பிள் ஐபோன் 17 அறிமுகம்: நீண்ட வரிசையில் காத்திருக்கும் இளைஞர்கள்!

ஆப்பிள் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ள ஐபோன் 17 மாடல் போனைப் பெறுவதற்கு தில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் தனது புதி... மேலும் பார்க்க

சர்வாதிகார திமுக அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

திமுக பிரமுகர் செய்தியாளர்களைத் தரக்குறைவாக வசைபாடி தாக்க முயன்ற சம்பவம் கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்ட... மேலும் பார்க்க

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவு

ரஷியாவின் கம்சட்கா கிழக்கு கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்... மேலும் பார்க்க