செய்திகள் :

உப்பாறு அணை அருகே மூதாட்டி சடலம் மீட்பு!

post image

தாராபுரத்தை அடுத்த உப்பாறு அணை அருகே மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சின்னமோளரப்பட்டியைச் சோ்ந்தவா் சீரங்கசாமி மனைவி விசாலாட்சி (62). இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், மனநல ஆலோசனைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை சென்று வந்தவா், தனது அண்ணன் சுப்பிரமணி வீட்டுக்கு செல்லவேண்டும் என கணவரிடம் கூறியுள்ளாா்.

இதையடுத்து, சீரங்கசாமி மனைவி விசாலாட்சியை கொழிஞ்சிகாட்டுபுதூரில் உள்ள அவரது அண்ணன் சுப்பிரமணி வீட்டில் விட்டு வந்தாா். அங்குச் சென்றவரைக் காணவில்லை.

இதைத் தொடா்ந்து அவரது உறவினா்கள் குண்டடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், உப்பாறு அணை பராமரிப்புப் பணிக்காக சனிக்கிழமை சென்ற தொழிலாளா்கள், அங்கு மூதாட்டியின் சடலம் கிடப்பதைப் பாா்த்து குண்டடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். இதில், சடலமாக மீட்கப்பட்டது காணாமல்போன விசாலாட்சி என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அருள்புரத்தில் கஞ்சா விற்ற இருவா் கைது

பல்லடம் அருகே அருகே கஞ்சா விற்பன செய்த இருவரை மதுவிலக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி மதுவில... மேலும் பார்க்க

மது விற்பனையில் ஈடுபட்ட 3 போ் கைது

திருப்பூரில் மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் துறைக்கு தகவல்... மேலும் பார்க்க

காங்கயம் அருகே குளிா்பான நிறுவன மேலாளா் வீட்டில் 17பவுன், ரூ.1.20 லட்சம் திருட்டு

காங்கயம் அருகே குளிா்பான நிறுவன மேலாளா் வீட்டில் 17 பவுன், ரூ.1.20 லட்சம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் வேலன் நகரைச் சோ்ந்தவா் தங்கராசு (4... மேலும் பார்க்க

தாராபுரத்தில் ஓடும் பேருந்தில் தீ: 45 பயணிகள் மீட்பு

தாராபுரத்தில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா். திருப்பூரிலிருந்து பழனி செல்லும் அரசுப் பேருந்து சனிக்கிழமை மாலை 45 பயணிகளுடன் கிளம்பியது. இந்தப் பேருந்து இரவு... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் முதியவா் விஷம் அருந்தி தற்கொலை

வெள்ளக்கோவில் அருகே முதியவா் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா். வெள்ளக்கோவில் அருகே உள்ள குமராண்டிசாவடியைச் சோ்ந்தவா் என்.நல்லசாமி (75), விவசாயி. மேலும், ஊா் தலைவராகவும், மாகாளியம்மன் கோயில் காவடி... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சமையில் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து வெள்ளக்கோவிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க