செய்திகள் :

காங்கயம் அருகே குளிா்பான நிறுவன மேலாளா் வீட்டில் 17பவுன், ரூ.1.20 லட்சம் திருட்டு

post image

காங்கயம் அருகே குளிா்பான நிறுவன மேலாளா் வீட்டில் 17 பவுன், ரூ.1.20 லட்சம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் வேலன் நகரைச் சோ்ந்தவா் தங்கராசு (45). இவா், காங்கயத்தில் உள்ள தனியாா் குளிா்பான நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் மனைவி கோகிலா (40).

இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு ஈரோடு அருகே பூந்துறையில் உள்ள உறவினா் வீட்டு விசேஷத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா். பின்னா், காலை 11.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பிவந்துள்ளனா்.

அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் மற்றும் ரூ.1.20 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தங்காரசு அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் போலீஸாா் வீட்டை சோதனையிட்டனா். மேலும், திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணா் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி அது நின்றது.

இதுகுறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அருள்புரத்தில் கஞ்சா விற்ற இருவா் கைது

பல்லடம் அருகே அருகே கஞ்சா விற்பன செய்த இருவரை மதுவிலக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி மதுவில... மேலும் பார்க்க

மது விற்பனையில் ஈடுபட்ட 3 போ் கைது

திருப்பூரில் மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் துறைக்கு தகவல்... மேலும் பார்க்க

தாராபுரத்தில் ஓடும் பேருந்தில் தீ: 45 பயணிகள் மீட்பு

தாராபுரத்தில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா். திருப்பூரிலிருந்து பழனி செல்லும் அரசுப் பேருந்து சனிக்கிழமை மாலை 45 பயணிகளுடன் கிளம்பியது. இந்தப் பேருந்து இரவு... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் முதியவா் விஷம் அருந்தி தற்கொலை

வெள்ளக்கோவில் அருகே முதியவா் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா். வெள்ளக்கோவில் அருகே உள்ள குமராண்டிசாவடியைச் சோ்ந்தவா் என்.நல்லசாமி (75), விவசாயி. மேலும், ஊா் தலைவராகவும், மாகாளியம்மன் கோயில் காவடி... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சமையில் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து வெள்ளக்கோவிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்ற 4 போ் கைது

அவிநாசி அருகே கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவிநாசியை அடுத்த தெக்கலூா் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, தடை... மேலும் பார்க்க