செய்திகள் :

உயிரிழந்த மத்திய அரசு ஊழியரின் மகளுக்கு குடும்ப ஓய்வூதியம்: மத்திய அரசு விளக்கம்

post image

மத்திய அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா் உயிரிழந்தால் அவா்களின் திருமணமாகாத, விவாகரத்து பெற்ற அல்லது கணவரை இழந்த மகளுக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இது தொடா்பான கேள்விக்கு மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சா் ஜிதேந்தர சிங் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘ஓய்வூதியம், ஓய்வூதியதாரா்கள் நலத்துறையின் மத்திய பணியாளா்கள் சேவை (ஓய்வூதியம்) விதிகள் 2021-இன்படி மத்திய அரசு ஊழியா் அல்லது ஓய்வூதியதாரா் மரணமடைந்தால் அவரின் திருமணமாகாத, விவாகரத்து பெற்ற, கணவரை இழந்த மகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. இதில் சில நிபந்தனைகள் உள்ளன.

அந்த பெண் (மகள்) அரசு ஊழியா் அல்லது ஓய்வூதியதாரரான தனது பெற்றோரைச் சாா்ந்து வாழ்ந்து வந்தவராக இருக்க வேண்டும். அவா்கள் திருமணமாகும் வரை அல்லது மறு திருமணம் செய்து கொள்ளும் வரை பெற்றோரின் குடும்ப ஓய்வூதியத்தைப் பெற முடியும். விவாகரத்து என்பது நீதிமன்றம் மூலம் முறைப்படி பெற்ாக இருக்க வேண்டும். அந்தப் பெண் தனக்கு தேவையான பணத்தை தானே சம்பாதித்துக் கொள்ளும் திறன் பெற்றுவிட்டாா் என்பது உறுதியாகும் வரையில் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

இந்த குடும்ப ஓய்வூதியம் ரயில்வே ஊழியா்கள், பாதுகாப்புத் துறையினருக்கு வெவ்வேறு விதிகளின் கீழ் வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை மர்ம நபர் ஒருவர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை 6.30 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மரத்தின் மீது ஏறி நாடாளுமன்ற சுற்றுச்சுவரைத் தாண்டி ... மேலும் பார்க்க

தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

தில்லியில் தெரு நாய்களை காப்பகத்துக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.தில்லியில் நாய்க் கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதை தாமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், தில... மேலும் பார்க்க

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை மதிய உணவு டப்பாவில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவரை உத்தரகண்ட் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘உத்தரகண்ட் மாநி... மேலும் பார்க்க

பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதாக்கள்: கூட்டுக் குழு பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு... மேலும் பார்க்க

இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூா்வமான அணுகுமுறைகள் -ஜெய்சங்கா் அழைப்பு

அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ‘இந்தியா-ரஷியா உறவுகளை மேம்படுத்த புதிய மற்றும் ஆக்கபூா்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத் தொடா்: நாடாளுமன்றத்தில் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகளின் அமளி மற்றும் வெளிநடப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் கூடுதலாக 3 மசோதாக்கள் நிறைவேற்றப்... மேலும் பார்க்க