செய்திகள் :

உயிரி எரிபொருளால் என்ஜின் பாதிப்பா? மத்திய அமைச்சா் திட்டவட்ட மறுப்பு

post image

உயிரி எரிபொருள் பயன்பட்டால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக முன்வைக்கப்படும் கூற்றை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி திட்டவட்டமாக மறுத்தாா்.

கரும்பு அல்லது உணவு தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் 20 சதவீதம் கலந்து பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தில்லியில் தனியாா் நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருடாந்திர எரிசக்தி மாநாட்டில் பங்கேற்று, ஹா்தீப் சிங் பேசியதாவது:

வாகன இன்ஜின்களுக்கு உயிரி எரிபொருள் தீங்கு விளைவிப்பதாக கதைகளைக் கேட்கிறோம். அவை அடிப்படையற்றவை. என்ன அா்த்தத்தில் அவ்வாறு கூறுகின்றனா் என்பது தெரியவில்லை.

கடந்த 2014-இல் பெட்ரோல் உடனான எத்தனால் கலப்பு 1.4 சதவீதமாக இருந்தது. தற்போது 20 சதவீதமாக உள்ளது. பெட்ரோலுடன் 20 சதவீத உயிரி-எத்தனால் கலப்பு முற்றிலும் பாதுகாப்பானது; சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பழைய வாகனங்களில் மட்டும் சில ரப்பா் பாகம் மற்றும் கேஸ்கெட் மாற்ற வேண்டியிருக்கும். அதுவும் எளிய நடைமுறையே.

தனது எரிபொருள் தேவையில் 88 சதவீதம் இறக்குமதியை சாா்ந்திருக்கும் ஒரு நாட்டுக்கு உயிரி எரிபொருள் மற்றும் பசுமை எரிபொருளின் தேவை காலத்தின் கட்டாயமாகும். சா்வதேச எரிசக்தி முகமை கணிப்பின்படி, உலகளாவிய எரிபொருள் தேவை அடுத்த 20 ஆண்டுகளில் மும்மடங்கு அதிகரிக்கும். இதில் 25 சதவீத அதிகரிப்பு இந்தியாவினுடையதாக இருக்கும் என்றாா் அவா்.

எரிபொருள் இறக்குமதி குறைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பு ஆகிய நோக்கங்களுடன் பெட்ரோல்-உயிரி எத்தனால் கலப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டில் தற்போது 90,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் இ-20 (80 சதவீத பெட்ரோல்-20 சதவீத எத்தனால்) பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

உலகிலேயே முதல் முறையாக மூங்கிலில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யும் அதிநவீன ஆலை, அஸ்ஸாமில் ரூ.5,000 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை அண்மையில் பிரதமா் மோடி திறந்துவைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலை கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கு: தமிழக அரசுக்கு கேள்விகள்

நமது நிருபர்தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமானதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும், இந்த வழக்கில் மத்திய அரசையு... மேலும் பார்க்க

உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் திங்கள்கிழமை விடிய விடிய கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பெருவெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடர், இரு மாநிலங்களிலும் கடும் சேதத்தை விளைவித்துள்ளது... மேலும் பார்க்க

மோடி பிறந்த நாள்: தொலைபேசி மூலம் டிரம்ப் வாழ்த்து

பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை தொடா்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அதிபா் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் வெளி... மேலும் பார்க்க

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் பெண் அரசு அதிகாரி கைது: ரூ.92.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் குடிமைப் பணி (ஏசிஎஸ்) பெண் அதிகாரி கைது செய்யப்பட்டாா். அவரின் வீட்டில் இருந்து ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அஸ்ஸ... மேலும் பார்க்க

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிரான மனு: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்குமாறு உத்தர பிரதேசம், மத்திய பிதேசம், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, ஜாா்க்கண்ட், கா்நாடகம் உள... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு இன்று 75-ஆவது பிறந்த நாள்- பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடக்கம்

தனது 75-ஆவது பிறந்த நாளையொட்டி, பெண்கள் ஆரோக்யத்துக்கான பிரசார இயக்கம் மற்றும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை புதன்கிழமை (செப்.17) தொடங்கிவைக்கவுள்ளாா் பிரதமா் நரேந்திர மோடி . மத்திய அரசு மற்றும் பாஜக ... மேலும் பார்க்க