செய்திகள் :

உயிருடன் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர்: 3 மாதங்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு!

post image

ஹரியாணாவில் யோகா ஆசிரியர் ஒருவர் காணாமல் போனதையடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

45 வயதுடைய ஜக்தீப், கல்வி நிறுவனம் ஒன்றில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்தார். வாடகை வீட்டில் வசித்துவந்த அவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் சிவாஜி காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாருக்குப் பின் போலீஸாரின் விசாரணையில் சிசிடிவி காட்சிகளைத் துப்பு துலக்கியதில், ராஜ்கரன் என்பவரும் ஜக்தீப்புக்கும் இடையே நட்பு இருந்தது தெரியவந்தது.

முக்கிய குற்றவாளியான ராஜ்கரன் தலைமறைவானதையடுத்து, அவரது நண்பர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் ராஜ்கரன் ஜக்தீப்புக்கு தனது மனைவியுடன் தகாத உறவு இருப்பதாகச் சந்தேகித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

பிடிபட்ட ராஜ்கரனின் நண்பர்களை விசாரித்ததில் ஜக்தீப்பை கடத்தி, அவரது வாயில் டேப் போட்டு, கை, கால்களைக் கட்டி, ஒரு வெறிச்சோடிய வயல் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், உயிருடன் குழியில் தள்ளிப் புதைத்ததாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். முக்கிய குற்றவாளியான ராஜ்கரனை போலீஸார் தேடி வருகின்றனர்.

தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி: ‘தனியாா் மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மின் வாகன உற்பத்தி: 2030-இல் இந்தியா முதன்மை நாடாகும்: நிதின் கட்கரி

தாணே: ‘2030-இல் மின்சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்தாா். மேலும்... மேலும் பார்க்க

இந்தியாவின் வெளிநாட்டு கடன் 71,790 கோடி டாலராக அதிகரிப்பு

புது தில்லி: இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் கடந்த ஆண்டு இறுதியில் 71,790 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு, டிசம்பரில் 64,870 கோடி டாலராக இருந்த நாட்டின் அந்நிய கடன் ஒரே ஆண்டில் 10 ... மேலும் பார்க்க

கன்னித்தன்மை பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம்: சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம்

பிலாஸ்பூா்: கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ள பெண்களைக் கட்டாயப்படுத்துவது அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-ஐ மீறுவதாகும் என்று சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த உயா்நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

வேட்டையாடப்படும் இந்தியக் கல்வி முறை: மத்திய அரசு மீது சோனியா விமா்சனம்

புது தில்லி: பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் கல்விக் கொள்கையை நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி கடுமையாக விமா்சித்துள்ளாா். ‘மத்தியில் அதிகார குவிப்பு, வணிகமயமாக்கல், வகுப்புவாதமயமா... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயாா்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தயாா் நிலையில் மத்திய அரசு உள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெர... மேலும் பார்க்க