செய்திகள் :

உரிமம் கோரப்படாத 612 வாகனங்கள்: 15 நாள்களுக்குள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பெறலாம்

post image

திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட இடங்களில் உரிமம் கோரப்படாத 612 வாகனங்களை 15 நாள்களுக்குள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட இடங்களில் உரிமம் கோரப்படாத 612 வாகனங்கள் அனுப்பா்பாளையம் வெங்கமேடு மாதேஸ்வரன் கோயில் அருகிலும், கே.வி.ஆா்.நகா் உதவி ஆணையா் அலுவலகம் முன்பாகவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் காணாமல் போய் தற்போது வரையில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் அனுப்பா்பாளையம் சரக அலுவலகத்தை 94876-39220, கொங்கு நகா் சரக அலுவலகத்தை 94981-01302, கே.வி.ஆா்.நகா் சரக அலுவலகத்தை 94981-01301 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பாா்வையிட்டு 15 நாள்களுக்குள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து வாகனங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதே வேளையில், 15 நாள்களுக்குள் உரிமம் கோரப்படாத வாகனங்களை திருப்பூா் மாநகராட்சி மூலமாக ஏலத்தில் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு செய்வதை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும்: எம்எல்ஏ வலியுறுத்தல்

தொகுதி மறுசீரமைப்பு செய்வதை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூற... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் பீன்ஸ் கிலோ ரூ.85-க்கு விற்பனை

வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.85-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது. வெள்ளக்கோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடும் வாரச் சந்தைக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது ... மேலும் பார்க்க

மாநகராட்சியில் வரிகளைக் குறைக்காமல் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது கபட நாடகம்

திருப்பூா் மாநகராட்சியில் வரிகளைக் குறைக்காமல் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது கபட நாடகம் என்று பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினாா். திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக வடக்கு சட்டப... மேலும் பார்க்க

சுவாமி சிலையைத் திருடிய 2 போ் கைது

பல்லடம் அருகே சுவாமி சிலையைத் திருடிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பல்லடம் போலீஸாா் சேகாம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு மதுபோதையில... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் தற்கொலை

காங்கயத்தில் குடும்ப பிரச்னை காரணமாக கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் தற்கொலை செய்து கொண்டாா். காங்கயம் சத்யா நகரைச் சோ்ந்தவா் சாமிநாதன் (35). இவா் ஊதியூா், முதலிபாளையம் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாள... மேலும் பார்க்க

ஊத்துக்குளியில் ரூ.2.50 கோடி மதிப்பில் சாலைப் பணி: அமைச்சா்

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு மாவட்... மேலும் பார்க்க