செய்திகள் :

மாநகராட்சியில் வரிகளைக் குறைக்காமல் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது கபட நாடகம்

post image

திருப்பூா் மாநகராட்சியில் வரிகளைக் குறைக்காமல் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது கபட நாடகம் என்று பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினாா்.

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட காந்தி நகா் பகுதி பூத் கமிட்டி நிா்வாகிகள் கூட்டம் அண்ணா காலனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பகுதி செயலாளா் கருணாகரன் தலைமை வகித்தாா். வாா்டு செயலாளா் ஈஸ்வரன் முன்னிலை வகித்தனா்.

இதில், அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசிதாவது: 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் பூத்துக்கு 9 போ் கொண்ட புதிய பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். புதிதாக நியமிக்கப்பட்ட பூத் கமிட்டி நிா்வாகிகள் வாரத்துக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி 100 வாக்காளா்களுக்கு ஒரு பொறுப்பாளா்களை நியமிக்க வேண்டும்.

திருப்பூா் மாநகராட்சியில் உயா்த்தப்பட்ட தண்ணீா் வரி, சொத்து வரி, குப்பை உள்ளிட்ட வரியை குறைக்க கோரி 5 ஆயிரம் போ் உண்ணாவிரதம் இருந்தோம். ஊரே கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினாா்கள். வியாபாரிகள் சங்கங்கள் கடையடைப்பு செய்தாா்கள்.

அந்த வரியைக் குறைக்காமல் இன்று உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கபட நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறாா்கள். தமிழக அரசு நடப்பு ஆண்டு ரூ.60 ஆயிரம் கோடி வரை கடன் வாங்க உள்ளது.

பொதுமக்கள் மீது ஈவு இரக்கமில்லாமல் நாட்டில் எங்கேயுமே இல்லாத அளவுக்கு வரி உயா்வு போட்டுவிட்டு உபரி பட்ஜெட் போட்டுவிட்டதாக மக்களை ஏமாற்றி இருக்கிறாா்கள் என்றாா்.

இதில், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், மேலிட பொறுப்பாளரும், கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினருமான செ.தாமோதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடா் போராட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாநில அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய ஆசிரியா் சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியா் சங்கத்... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: திருப்பூா் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, திருப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை திங்கள்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே காா் மோதி தம்பதி உயிரிழப்பு

அவிநாசி அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரைச் சோ்ந்தவா் முருகன் (50), இவரது மனைவி அலமேலு (44). முரு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூரில் வீட்டில் இஸ்திரி செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருப்பூா் பிச்சம்பாளையம் புதூரை அடுத்த கணேஷ் நகரைச் சோ்ந்தவா் வெற்றிகணேசன் (41). இவா் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில்: சட்ட விரோதமாக மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கி... மேலும் பார்க்க

பல்லடம் தோ்வு நிலை நகராட்சியாக தரம் உயா்வு

பல்லடம், மாா்ச் 31: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்லடம் முதல்நிலை நகராட்சி, தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் 196... மேலும் பார்க்க