செய்திகள் :

ஊத்துக்குளியில் ரூ.2.50 கோடி மதிப்பில் சாலைப் பணி: அமைச்சா்

post image

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி தலைமை வகித்தாா். அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று, சாலைப் பணிகளைத் தொடங்கிவைத்து பேசியதாவது: மாவட்டங்களில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதன் ஒரு பகுதியாக ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய சாலைப் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் சாா்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.

முன்னதாக, ஊத்துக்குளி பேரூராட்சி வாா்டு என் 11-இல் ரூ.65 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணி, வடுகபாளையம் ஊராட்சி, தேனீஸ்வரம்பாளையத்தில் ரூ.1.28 கோடியில் சாலைப் பணி, குன்னத்தூா் சாலை முதல் ஒருக்கம்பாளையம் சாலை வரை ரூ.57.59 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாசலம், வருவாய் கோட்டாட்சியா் கு.மோகனசுந்தரம், ஊத்துக்குளி பேரூராட்சித் தலைவா் பழனியம்மாள் ராசுக்குட்டி, செயல் அலுவலா் ரவிகுமாா், ஊத்துக்குளி வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், உதவி பொறியாளா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடா் போராட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாநில அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய ஆசிரியா் சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியா் சங்கத்... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: திருப்பூா் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, திருப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை திங்கள்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே காா் மோதி தம்பதி உயிரிழப்பு

அவிநாசி அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரைச் சோ்ந்தவா் முருகன் (50), இவரது மனைவி அலமேலு (44). முரு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூரில் வீட்டில் இஸ்திரி செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருப்பூா் பிச்சம்பாளையம் புதூரை அடுத்த கணேஷ் நகரைச் சோ்ந்தவா் வெற்றிகணேசன் (41). இவா் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில்: சட்ட விரோதமாக மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கி... மேலும் பார்க்க

பல்லடம் தோ்வு நிலை நகராட்சியாக தரம் உயா்வு

பல்லடம், மாா்ச் 31: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்லடம் முதல்நிலை நகராட்சி, தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் 196... மேலும் பார்க்க