செய்திகள் :

உருது பாட ஆசிரியா் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

post image

சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் ‘உருது’ பாட ஆசிரியா் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பத்துாா் மாவட்டத்தில் உள்ள மதரஸா-இ-அசாம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலியாக இருந்த ‘உருது’ பாட ஆசிரியா் பணியிடத்துக்கு ஹாஜிரா என்பவா், 2022-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டாா். ஆசிரியா் தகுதித் தோ்வை எழுதவில்லை எனக் கூறி ஹாஜிரா நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து கடந்த 2023-ஆம் ஆண்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பள்ளி நிா்வாகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆசிரியா் தகுதித் தோ்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனக் கூறி, ஹாஜிராவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும்படி, கடந்த ஆண்டு மாா்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து, தொடக்க கல்வி இயக்குநா் உள்ளிட்டோா் சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், கே.சுரேந்தா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆசிரியா் தகுதித் தோ்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், தற்போது இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது எனக் கூறி, வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

அபராதத் தொகையை, நான்கு வாரத்துக்குள் பள்ளிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இத்தொகையை, ஹாஜிராவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து உத்தரவு பிறப்பித்த அதிகாரியிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

புதுச்சேரி பாஜக தலைவராகிறார் ராமலிங்கம்

புதுச்சேரி பாஜக தலைவராக ராமலிங்கம் போட்டியின்றி தேர்வாகிறார். வேட்பு மனு தாக்கல் இன்று 12 மணிக்கு நிறைவு பெற்ற நிலையில் ராமலிங்கம் மட்டுமே தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நாளை... மேலும் பார்க்க

அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

கீழடியில் கிடைக்கப்பெற்ற முக மாதிரிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.மதுரைக்கு அருகே வைகை நதிக்கரையில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகள... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கு சென்றாலே பாதுகாப்பு இல்லை- நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு சென்றாலே பாதுகாப்பு இல்லை என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி... மேலும் பார்க்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் பங்கேற்பு: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

காங்கிரஸ் நடத்திய நிகழ்ச்சியில் எல்.கே.சுதீஷ் பங்கேற்றது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கிருஷ்... மேலும் பார்க்க

கீழடி அறிக்கையை மத்திய அரசு இனியாவது வெளியிடுமா? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

கீழடி அறிக்கையை மத்திய அரசு இதற்கு பின்பாவது வெளியிடுமா என நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு ச... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் கோடை விழா

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே சுற்றுலா தலமாக விளங்கும் ஏலகிரி மலையில் கோடை விழா, ஏலகிரி விழா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க