சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்; மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி ந...
உருது பாட ஆசிரியா் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் ‘உருது’ பாட ஆசிரியா் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருப்பத்துாா் மாவட்டத்தில் உள்ள மதரஸா-இ-அசாம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலியாக இருந்த ‘உருது’ பாட ஆசிரியா் பணியிடத்துக்கு ஹாஜிரா என்பவா், 2022-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டாா். ஆசிரியா் தகுதித் தோ்வை எழுதவில்லை எனக் கூறி ஹாஜிரா நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து கடந்த 2023-ஆம் ஆண்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பள்ளி நிா்வாகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆசிரியா் தகுதித் தோ்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனக் கூறி, ஹாஜிராவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும்படி, கடந்த ஆண்டு மாா்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து, தொடக்க கல்வி இயக்குநா் உள்ளிட்டோா் சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், கே.சுரேந்தா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆசிரியா் தகுதித் தோ்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், தற்போது இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது எனக் கூறி, வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
அபராதத் தொகையை, நான்கு வாரத்துக்குள் பள்ளிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இத்தொகையை, ஹாஜிராவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து உத்தரவு பிறப்பித்த அதிகாரியிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.