செய்திகள் :

`உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன; திமுக நிர்வாகிகள் கவனமாக பேசவேண்டும்'- ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

post image

ராமேஸ்வரம் நகர் திமுக சார்பில் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகர் மன்ற தலைவர் நாசர் கான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறைப்புரையாற்றிய திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ''யார் கட்சி ஆரம்பித்தாலும் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் இளைஞர்கள் சிலர் புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்களின் பின்னால் செல்கின்றனர். அவர்களின் ஆசை எல்லாம் நிராசையாக போய்விடும். தமிழ்நாட்டில் திமுக-விற்கு மாற்றாக எந்த கட்சியாலும் வர முடியாது. தமிழக முதல்வர், இப்பகுதி மீனவர்களின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி தருபவர். இந்த மாவட்டத்திற்கு என பல சிறப்பு திட்டங்களை ஒதுக்கி வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்கிறார்.

100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டிய மத்திய அரசு 4034 கோடி ரூபாயினை தராமல் உள்ளது. இதனால் வேலை செய்தவர்களுக்கு கூலி கொடுக்க முடியாத நிலை உள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பினால் 'ஸ்டாலின்தான் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்ல' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமிராக பேசுகிறார். காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரி வரை மோடி தான் பிரதமர். அவர் நினைத்தால் இலங்கை சிறையில் உள்ள 149 மீனவர்களையும் விடுதலை செய்ய முடியும். 5-ம் தேதி இலங்கை செல்கிறார். அவர் நம் மீனவர்களை விடுவிக்கச் செல்கிறாரா அல்லது இலங்கை அதிபரால் ரத்து செய்யப்பட்ட தனது நண்பர் அதானியின் திட்டங்களை மீண்டும் பெற்றுத்தர செல்கிறாரா என்பது அவரது பயணத்திற்கு பின் தெரிந்துவிடும்.

தி.மு.க பொதுக்கூட்டம்
ஆர்.எஸ்.பாரதி

நம் கட்சி நிர்வாகிகள் தொலைபேசி, செல்போன்களில் உரையாடும் போது கவனமாக பேசுங்கள். ஏன் எனில் நமது பேச்சுக்களை எல்லாம் மத்திய அரசு ஒட்டு கேட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் எனக்கே அந்த அனுபவம் ஏற்பட்டது. நடிகர் கருணாசை ஒரு கூட்டத்தில் பங்கேற்க செல்போன் வழியாக அழைப்பு விடுத்தேன். நான் பேசிய அடுத்த 10 நிமிடத்தில் கருணாஸிடம் பேசினீர்களா என நமது கட்சியின் நிர்வாகி என்னிடம் கேட்டார். நான் பேசியது உங்களுக்கு எப்படி தெரியும் என அவரிடம் கேட்டேன். நீங்கள் கருணாஸிடம் பேசியதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மத்திய உளவுத்துறையினர் என்னிடம் கேட்டனர் என அவர் பதில் சொன்னார்.

இதில் இருந்தே தெரிகிறது. இதயம் இருக்க வேண்டிய இடத்தில் இரும்பை வைத்திருக்கும் மோடி ஆட்சியில் எல்லாவற்றையும் ஒட்டு கேட்பார்கள் என. எனவே கட்சி நிர்வாகிகள் கவனமாக பேசுங்கள் என்று எச்சரிக்கையாக சொல்கிறேன். தமிழ் மொழிக்காக போராடியவர்களுக்கு வழங்கப்பட்ட கோட்டாவின் வழியாக எம்.பி.பி.எஸ் படித்தவர் தமிழிசை. இன்றைக்கு அதை மறந்துவிட்டு தமிழுக்கு எதிராக பேசுகிறார்'' என்றார்.

Waqf Bill: "இஸ்லாமியர் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சி" - நாடாளுமன்றத்தில் ஆ.ராசா பேச்சு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வக்ஃப் சட்டத் திருத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றிருந்த திமுக எம்.பி ஆ.ராசா, சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்ட... மேலும் பார்க்க

'அவரைக் கூப்பிடாதீங்க'னு எல்லார்கிட்டயும் சொல்லியிருக்காராம்’ - தாடி பாலாஜி vs தவெக பஞ்சாயத்து

ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்தவர் நடிகர் தாடி பாலாஜி. விஜய் தமிழகவெற்றி கழகத்தைத் தொடங்கியதும்,அதில்சேர ஆர்வம் காட்டி வந்தார். கள்ளக்குறிச்சியில் நடந்த தவெக-வின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டார்.... மேலும் பார்க்க

`என் சிறுநீரகம் ரூ.75000, கல்லீரல் ரூ.90000'- கடனை அடைக்க உறுப்புகளை விற்கப்போவதாக விவசாயி போராட்டம்

மகாராஷ்டிராவில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். நாட்டிலேயே அதிக விவசாயிகள் தற்கொலை செய்யும் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் கடன் தள்ள... மேலும் பார்க்க

Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்கு முதல்வர் கடிதம்

வக்ஃப் சட்டதிருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் ஓரணியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சட்டதிருத்த மசோதாவ... மேலும் பார்க்க

Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா காட்டம்

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், சூழலைப் பொறுத்து கூடுதல் நேரம் விவாதிக்கப்படும் என்றும்... மேலும் பார்க்க

கச்சத்தீவு : ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்... ஆனாலும் அனல் பறந்த விவாதம் - நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத்தில் நெடுநாள் பிரச்னையான கச்சத்தீவு விவகாரத்தில் முதலமைச்சரின் தனித் தீர்மானம் இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானதுக்கு பாஜக சார்பில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்து... மேலும் பார்க்க