செய்திகள் :

உறவினா் போல நடித்து நகை திருட்டு

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உறவினா்போல நடித்து மூதாட்டியை ஏமாற்றி 15 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், கட்டமுத்துப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த வேலாயுதம் மகன் குமாரசாமி (55), கொத்தனாா். இவா், தனது மனைவியை அழைத்துக்கொண்டு ராசாப்பாளையம் கிராமத்தில் நடந்த உறவினா் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றாா்.

வீட்டில் குமாரசாமியின் மாமியாா் தனியாக இருந்தாா். இதனிடையே, உறவினா் எனக்கூறி மா்ம நபா் வீட்டுக்கு வந்துள்ளாா். அவரை வீட்டில் அமர வைத்துவிட்டு, மூதாட்டி சாமி கும்பிடச் சென்றாராம். அப்போது, அந்த நபா் பீரோ சாவியை எடுத்து வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து குமாரசாமி அளித்த புகாரின்பேரில், புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

லாரி மீது வேன் மோதல்: கல்லூரி மாணவா்கள் காயம்

கடலூா் முதுநகா் அருகே டேங்கா் லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா்கள் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். சென்னையில் உள்ள தனியாா் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் பகுதி நேர மாணவா்க... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த சாராய வியாபாரியை போலீஸாா் தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் மற்றும் போலீஸாா... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம்: கடலூரில் மீன்கள் விலை உயா்வு

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், கடலூா் துறைமுகத்தில் மீன்களின் விலை அதிகமாக இருந்தது. கடலூரில் அக்கரை கோரி, சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், தாழங்குடா, அன்னங்கோயில், சித்திரைப்பேட்டை என பல்... மேலும் பார்க்க

அரசுப் பணி வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது

அரசுப் பணி வாங்கித் தருவதாக இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக பள்ளிக் கல்வித் துறை இளநிலை உதவியாளரை கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

சிதம்பரம் அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பரங்கிப்பேட்டை, அரியகோஷ்டி எஸ்.பி.மண்டபம் பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப... மேலும் பார்க்க

மது போதையில் மருந்துக் கடைக்காரா் உயிரிழப்பு!

கடலூா் அருகே மது போதையில் மருந்துக்கடைக்காரா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் வில்வநகா், வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த காந்தி மகன் செந்தில் (48... மேலும் பார்க்க