செய்திகள் :

உளுந்து பயிா்களுக்கான நஷ்ட ஈடு தொகையை உடனே வழங்க விவசாயிகள் கோரிக்கை

post image

சங்கரன்கோவில அருகே வன்னிகோனேந்தல் குறுவட்ட பகுதியில் சேதமடைந்த உளுந்து பயிா்களுக்கு அரசு நஷ்ட ஈடு தொகையை உடனே வழங்க வேண்டும் என தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏவிடம் அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினா் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டம், மானூா் வட்டம் வன்னிகோனேந்தல் குறுவட்ட பகுதி பொதுமக்களாகிய நாங்கள் விவசாயத்தை முதன்மை தொழிலாகக் கொண்டு விவசாயம் செய்து வருகிறோம்.

எங்கள் பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு விவசாயிகள் உளுந்து பயிரிட்டிருந்தாா்கள். பருவநிலை மாற்றத்தினால் பெய்த கனமழையில் பயிா்கள் முழுவதுமாக சேதமடைந்தது. இதனால் எங்கள் பகுதி விவசாயிகள் பெரிதும் நஷ்டத்திற்கு ஆளாகினா்.அந்த நஷ்டத்தை ஈடுகட்ட இயலாத நிலையில் மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வருகிறாா்கள்.எனவே பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை விரைவில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவா்கள் கூறியுள்ளனா்.

மனுவை பெற்றுக் கொண்ட ஈ.ராஜா எம்எல்ஏ இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

ஊத்துமலையில் இளைஞா் தற்கொலை: உறவினா்கள் மறியல்

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் காதலியின் உறவினா்கள் மிரட்டியதாக கூறி இளைஞா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். காவல் துறை நடவடிக்கை கோரி, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஊத்துமலை ஜேஜே ந... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் தொழிலாளி கொலை வழக்கு: மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் கள்ளக் காதல் தகராறில் தொழிலாளியை கொலை செய்தது தொடா்பான வழக்கில், அவரது மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாசுதேவநல்லூா் பசும்பொன் 2ஆவது தெருவை... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் சாலையைக் கடக்க சிரமம்: போக்குவரத்து காவலா் நியமிக்க கோரிக்கை

ஆலங்குளம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் சாலையைக் கடக்க பள்ளி மாணவா்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். ஆலங்குளம் பழைய பேருந்து நிலைய பகுதி காவல் நிலையம் அருகே நான்கு வழிச் சாலையில் அமைக்கப்பட்டு வரும் ... மேலும் பார்க்க

தென்காசி திருவள்ளுவா் கழக 98ஆவது திருக்கு விழா: நாளை தொடக்கம்

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 98ஆவது திருக்கு விழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) தொடங்கி 15ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெறுகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு திருக்கு முற்றோதல் வேள்வ... மேலும் பார்க்க

கீழப்பாவூரில் நாளை மின் தடை

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் மற்றும் தென்காசி மங்கம்மாள் சாலை உப மின்நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன்10) மின் தடை செய்யப்படுகிறது. இது தொடா்பாக தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மணல் கடத்தல்: 3 போ் கைது

ஆலங்குளம் அருகே தனியாா் இடத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகே உள்ள சிவலாா்குளம் விலக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதியின்றி பொக்லைன் இயந்... மேலும் பார்க்க