செய்திகள் :

``இது என் அம்மா, மீண்டும் கடலில் வீசிவிடுங்கள்.." - ஒரு தாயின் ஆசைக்கு மகளின் நெகிழ்ச்சி செயல்!

post image

இங்கிலாந்தின் ஓல்ட்ஹாம் பகுதி கடற்கரையில் கண்ணாடி பாட்டில் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் சுருட்டப்பட்ட ஒரு காகிதம் இருந்தது. அந்தக் காகிதத்தில், ``இந்த பாட்டிலில் இருப்பது என் அம்மா... அவர் உயிருடன் இருக்கும்போது இந்த உலகை சுற்றிப்பார்க்க வேண்டும் என விரும்பினார். எனவே, உங்கள் கரங்களில் இந்த பாட்டில் கிடைத்தால் தயவுசெய்து மீண்டும் கடலில் எறிந்துவிடுங்கள்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Daughter - Mother

அந்த பாட்டிலையும், அதன் வாசகத்தையும் ஒரு பெண் சமூக ஊடகத்தில் பதிவிட்டு, ``இந்த அழகான பெண் இருக்கும் பாட்டிலை இன்று அதிகாலை ஸ்கெக்னஸ் கடற்கரையில் கண்டோம்... அந்தக் கடிதத்தில் கேட்டபடி மீண்டும் கடலில் வீசிவிட்டோம். மகிழ்ச்சியாக பயணியுங்கள் அம்மா" என சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது அந்தப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.

இது தொடர்பாக பிபிசி வெளியிட்டிருக்கும் செய்தியில், ஓல்ட்ஹாமைச் சேர்ந்த 24 வயது காரா மெலியா என்றப் பெண், 51 வயதில் காலமான தன் தாய் வெண்டி சாட்விக்கின் சாம்பலை ஒரு பாட்டிலில் நிரப்பி அதில், சில வாசகங்களை எழுதி கடலில் வீசியிருக்கிறார். இது தொடர்பாக பிபிசியிடம் காரா மெலியா பேசினார்.

கிடைத்த பாட்டில்
கிடைத்த பாட்டில்

ஒரு தாயின் நிறைவேறாத கனவு

அப்போது, `` என் அம்மா வெண்டி சாட்விக் உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என ஏங்கினார், ஆனால் அவருக்கு அதற்கான வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ஐந்து குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது. தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அதற்கே செலவிட்டார். அவரின் பெரும் ஆசையே யாருக்கும் அவரைத் தெரியாத புதிய தேசத்தில் கொஞ்ச காலம் வாழ வேண்டும் என விரும்பினார்.

அவரின் மறைவு எங்களை கடுமையாக பாதித்தது. அவருக்கென அவர் எதுவும் செய்துகொள்ளவில்லை என்பதும் வேதனையாக இருந்தது. அதனால்தான் அவரின் சாம்பலை கடலில் வீசினேன்' என்றார். அவர் கடலில் வீசிய பாட்டில் அடுத்த 12 மணி நேரத்தில் ஸ்கெக்னஸ் பகுதியில் அந்த பாட்டில் கரை ஒதுங்கியது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம்: செய்தியாளர் மீது பாய்ந்த ரப்பர் தோட்டா - அதிர்ச்சி வீடியோ!

செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர் மீது ரப்பர் தோட்டா பாய்ந்த வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அதிபர் டொனால்டு ட்ரம்ப்... மேலும் பார்க்க

Iran: நாய்கள் நடைபயிற்சி செய்ய தடை விதிக்கும் ஈரான் - என்ன காரணம்?

ஈரான் நாட்டின் பொது இடங்களில் நாய்கள் நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தடையை மீறும் நாய் உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதா... மேலும் பார்க்க

Geetham Veg: சென்னை போரூரில் கீதம் வெஜ் புதிய உதயம்!

சென்னையின் பிரபல சைவ உணவக சங்கிலி, கீதம் வெஜ், தனது 14-வது கிளையை போரூரில் திறந்துள்ளது. பல்வேறு வகையான உணவுகளுக்காக பெயர் பெற்ற கீதம், சென்னையின் அனைத்து மூலைகளிலும் உண்மையான சுவைகளை கொண்டு செல்லும் ... மேலும் பார்க்க

ஹோட்டல் அறைகளில் பெரும்பாலும் கடிகாரங்கள் இருப்பது இல்லை - ஏன் தெரியுமா?

வணிக ரீதியான பயணங்கள், விடுமுறை நாட்கள் கழிப்பது என பயணங்கள் மேற்கொள்ளும் போது, இளைப்பாற பெரும்பாலும் ஹோட்டல்களில் மக்கள் தங்குகின்றனர். அப்படி தங்கும் ஹோட்டல் அறைகளில் பல வசதிகள் இருக்கும். நீச்சல் க... மேலும் பார்க்க

NO Alcohol; காபி குடிக்க டிஜே, பார்ட்டி - யூத் ட்ரெண்டில் `காபி ரேவ்’... சென்னையிலும் இருக்கா?

சூரியன் உதிக்கும் போது பார்ட்டி... பார்டி என்றவுடன் காலையிலேயே மதுவா? என்று நினைக்கலாம். ஆனால் இது காபி பார்ட்டி... டிஜே சத்தத்துடன், நடனம் ஆடிக்கொண்டே பருகும் காபி. இதனை `காபி ரேவ்’ என்று அழைக்கின்றன... மேலும் பார்க்க

`முன்னாடி, லவ்னு வேற யாரையோ சொன்னானேனு குழம்பாதீங்க..!’ - காதலியை மணந்த 'மைக்செட்' ஶ்ரீராம்

யூ டியூபில் வீடீயோக்கள்போட்டு பிரபலமானவர் ஶ்ரீராம் தண்டபாணி. பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஶ்ரீராமின் சேனல் பெயரைச் சொன்னால் 'அட இவரா' எனக் கேட்பீர்கள். இவரது சேனல் பெயர் 'மைக்செட்'ஆம், தற்போது ஓரிரு படங்க... மேலும் பார்க்க