செய்திகள் :

Iran: நாய்கள் நடைபயிற்சி செய்ய தடை விதிக்கும் ஈரான் - என்ன காரணம்?

post image

ஈரான் நாட்டின் பொது இடங்களில் நாய்கள் நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தடையை மீறும் நாய் உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் எந்த சட்டமும் இயற்றப்படவில்லை என்றாலும், மாறாக உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் காவல்துறை உத்தரவுகள் மூலம் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரம், சமூக ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுவெளியில் கிட்டத்தட்ட ஈரானின் 20 நகரங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாய்களுடன் நடப்பது பொதுமக்களுக்கு உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது என்று ஈரானிய அதிகாரிகள் கூறுகின்றனர். நாய்களுடன் நடப்பது பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

கெர்மன்ஷா, இலம், ஹமதான், கெர்மன், போரூஜெர்ட், ரோபட் கரீம், லாவசனாட் மற்றும் கோலெஸ்தான் உள்ளிட்ட நகரங்களில் நாய்கள் பொதுவெளியில் நடக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஃபராஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

சமூக ஒழுங்கைப் பராமரிப்பதையும், நாட்டின் அதிகாரப்பூர்வ மதமான ஷியா இஸ்லாத்தை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூங்காக்கள், பொது இடங்களில் நாய்களை நடமாடுவதைக் கண்டாலோ அல்லது வாகனங்களில் அவற்றை சுமந்து செல்வதைக் கண்டாலோ சம்மந்தப்பட்டவர்கள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை ஜூன் 6 முதல் அமலுக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம்: செய்தியாளர் மீது பாய்ந்த ரப்பர் தோட்டா - அதிர்ச்சி வீடியோ!

செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர் மீது ரப்பர் தோட்டா பாய்ந்த வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அதிபர் டொனால்டு ட்ரம்ப்... மேலும் பார்க்க

Geetham Veg: சென்னை போரூரில் கீதம் வெஜ் புதிய உதயம்!

சென்னையின் பிரபல சைவ உணவக சங்கிலி, கீதம் வெஜ், தனது 14-வது கிளையை போரூரில் திறந்துள்ளது. பல்வேறு வகையான உணவுகளுக்காக பெயர் பெற்ற கீதம், சென்னையின் அனைத்து மூலைகளிலும் உண்மையான சுவைகளை கொண்டு செல்லும் ... மேலும் பார்க்க

``இது என் அம்மா, மீண்டும் கடலில் வீசிவிடுங்கள்.." - ஒரு தாயின் ஆசைக்கு மகளின் நெகிழ்ச்சி செயல்!

இங்கிலாந்தின் ஓல்ட்ஹாம் பகுதி கடற்கரையில் கண்ணாடி பாட்டில் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் சுருட்டப்பட்ட ஒரு காகிதம் இருந்தது. அந்தக் காகிதத்தில், ``இந்த பாட்டிலில் இருப்பது என் அம்மா... அவர் உயிருடன்... மேலும் பார்க்க

ஹோட்டல் அறைகளில் பெரும்பாலும் கடிகாரங்கள் இருப்பது இல்லை - ஏன் தெரியுமா?

வணிக ரீதியான பயணங்கள், விடுமுறை நாட்கள் கழிப்பது என பயணங்கள் மேற்கொள்ளும் போது, இளைப்பாற பெரும்பாலும் ஹோட்டல்களில் மக்கள் தங்குகின்றனர். அப்படி தங்கும் ஹோட்டல் அறைகளில் பல வசதிகள் இருக்கும். நீச்சல் க... மேலும் பார்க்க

NO Alcohol; காபி குடிக்க டிஜே, பார்ட்டி - யூத் ட்ரெண்டில் `காபி ரேவ்’... சென்னையிலும் இருக்கா?

சூரியன் உதிக்கும் போது பார்ட்டி... பார்டி என்றவுடன் காலையிலேயே மதுவா? என்று நினைக்கலாம். ஆனால் இது காபி பார்ட்டி... டிஜே சத்தத்துடன், நடனம் ஆடிக்கொண்டே பருகும் காபி. இதனை `காபி ரேவ்’ என்று அழைக்கின்றன... மேலும் பார்க்க

`முன்னாடி, லவ்னு வேற யாரையோ சொன்னானேனு குழம்பாதீங்க..!’ - காதலியை மணந்த 'மைக்செட்' ஶ்ரீராம்

யூ டியூபில் வீடீயோக்கள்போட்டு பிரபலமானவர் ஶ்ரீராம் தண்டபாணி. பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஶ்ரீராமின் சேனல் பெயரைச் சொன்னால் 'அட இவரா' எனக் கேட்பீர்கள். இவரது சேனல் பெயர் 'மைக்செட்'ஆம், தற்போது ஓரிரு படங்க... மேலும் பார்க்க