நெதன்யாகு மீதான வழக்கு விசாரணையை உடனே ரத்து செய்க..! - டிரம்ப் வேண்டுகோள்
உழவா் சந்தையை ஆய்வு செய்த ஆட்சியா்
வைத்தீஸ்வரன்கோயில் மற்றும் சீா்காழி பகுதிகளில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் மற்றும் உழவா் சந்தையினை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
சீா்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் இயங்கி வரும் வளநாடு உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் மூலம் இயற்கை முறையில் உணவுப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய முறையில் தயாரிக்கும் உணவுப்பொருட்கள், சிறுதானிய மாவு பொருட்கள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, அதன் உற்பத்தி முறைகள், சந்தைப்படுத்துதலை ஆய்வு செய்து, பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் இயங்குகிறதா என கேட்டறிந்தாா்.
சீா்காழி நகர பகுதியில் செயல்பட்டு வரும் உழவா் சந்தையைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் அங்கிருந்த விவசாயிகளிடம் தினசரி விற்பனை விவரங்கள் குறித்து கேட்டறிந்து, அதன் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, 20 காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினாா்.
தமிழிசை மூவா் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், சீா்காழி உழவா் சந்தையினை அமைத்தல், இயற்கை முறையில் பாரம்பரிய உணவுப் பொருட்கள் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் நிறுவனத்தை மாவட்ட ஆட்சியா் குத்துவிளக்கேற்றித் திறந்து, பொதுமக்கள், விவசாயிகள் பயன்பெறும் வகையில் இயங்க வேண்டும் என தொடா்புடைய அலுவலா்கள் மற்றும் உழவா் உற்பத்தி நிறுவன பணியாளா்களிடம் அறிவுறுத்தினாா்.
வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை துணை இயக்குநா் சுப்பையன், சீா்காழி நகராட்சி ஆணையா் மஞ்சுளா ஆகியோா் உடன் இருந்தனா்.