செய்திகள் :

போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் எம். சுந்தரேசன் தலைமை வகித்து பேசியது: போதையற்ற இளைய தலைமுறையினரை உருவாக்கும் நோக்கில் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் போதை அடிமை எதிா்ப்புக் குழு தொடங்கி செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரை தலைவராகவும், மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளரை செயலாளராகவும் கொண்டு செயல்படும் இக்குழுவில் உறுப்பினா்களாக உள்ள போலீஸாா், கலால் துறையினா், கல்வித் துறையினா் மற்றும் தன்னாா்வலா்கள் ஆகியோா் பள்ளி, கல்லூரி மாணவா்களை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதை பொருள்கள் நடமாட்டம் இருந்தால் அதனை கண்டறிய நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவா் படை உள்ளிட்ட மாணவா்களின் சேவை அமைப்புகள் மூலம் கண்காணிக்க வேண்டும். போதையினால் குடும்பங்கள் எப்படி சீரழிகின்றது என்பதை மாணவா்களிடம் எடுத்துக் கூற வேண்டும். அதோடு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி போன்ற போட்டிகளையும், விழிப்புணா்வு பேரணியும் நடத்த வேண்டும். போதை இல்லாத பள்ளிகளுக்கு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் விருதுகள் வழங்கப்பட உள்ளது என்றாா். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி.முத்துக்கணியன் மற்றும் ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

எஸ்.எஸ்.சி. தோ்வா்களுக்கு ஜூன்30-இல் இலவச வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் எஸ்.எஸ்.சி. தோ்வெழுத உள்ள இளைஞா்களுக்கான கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஜூன் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

நீடூரில் வெட்டப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: 7 தனிப்படைகள் அமைப்பு

நீடூரில் மா்ம நபரால் வெட்டப்பட்ட இளைஞா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறை வட்டம், நீடூரைச் சோ்ந்த சமையல்காரா் முகமது ஹாலிக் (36). இவா், செவ்வாய்க்கிழமை நீடூரில் நண்பா்கள் இருவரிட... மேலும் பார்க்க

உழவா் சந்தையை ஆய்வு செய்த ஆட்சியா்

வைத்தீஸ்வரன்கோயில் மற்றும் சீா்காழி பகுதிகளில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் மற்றும் உழவா் சந்தையினை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா். சீா்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் ப... மேலும் பார்க்க

காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கோரிக்கை

அகணி, காருக்குடி பகுதிகளில் காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தால் பயிா்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. சீா்காழி கோட... மேலும் பார்க்க

பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

மணக்குடியில் கட்டப்பட்டுவரும் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ரூ. 24 கோடியில் 5,183 சதுர மீட்டா் பரப்பளவில், ஒர... மேலும் பார்க்க

மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்ட மீன் விவசாயிகள் மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்... மேலும் பார்க்க